For Daily Alerts
Just In
பொது குளியல் அறையில் ஓரினச்சேர்க்கை - எகிப்தில் 33 பேர் கைது!
கெய்ரோ: எகிப்தில் பொது குளியல் அறையில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 33 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
எகிப்து நாட்டின் கெய்ரோ நகர் அருகே உள்ளது அஷ்பகேயா. நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள பொது குளியல் அறை ஒன்றில் சிலர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாக அந்நாட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பொது குளியல் அறை ஒன்றில் சுமார் முப்பதுக்கும் அதிகமானோர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 33 பேரைக் கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், தீய ஒழுக்கம் மேலும் பரவாமல் கட்டுப்படுத்தவே அவர்களை கைது செய்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.
Comments
English summary
Thirty-three men have been arrested in a night-time police raid on a Cairo bathhouse for alleged "debauchery", a security official said on Monday.