தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தியால் 2 மணி நேரம் மூடப்பட்ட ஈபிள் டவர்
பாரீஸ்: மர்ம வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து நேற்று இரண்டு மணி நேரம் ஈபிள் டவர் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டது. பின்னர் நடத்தப் பட்ட தீவிர சோதனைகளுக்குப் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்ததையடுத்து மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக ஈபிள் டவர் திறக்கப்பட்டது
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ளது ‘ஈபிள் டவர்'. சுமார் 324 மீட்டர் உயரம் இரும்பினால் கட்டப்பட்ட இக்கோபுரத்தை தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காண வருகின்றனர்.
உலக அதிசயங்களில் ஒன்றான இக்கோபுரம் சுற்றுலா தளங்களில் ஒன்று. இந்நிலையில் கடந்த 9-ந்தேதி இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வந்த மர்ம டெலிபோனில் மிரட்டல் வந்தது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். அதன்பின்னர் சுமார் 2 மணி நேரம் ஈபிள் டவர் மூடப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து மீண்டும் வழக்கம் போல பொதுமக்கள் பார்வைக்காக ஈவிள் டவர் மீண்டும் திறக்கப்பட்டது.
ஏற்கனவே, கடந்த மார்ச் 30-ந்தேதியும் இதேபோன்ற சம்பவத்தால் ஈபிள்கோபுரம் சிறிது நேரம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications