இனி இந்தியர்களுக்கு வேலை இல்லை? H-1B விசா திட்டத்திற்கு முழு தடை? எலான் மஸ்க் சொன்ன முக்கிய கருத்து
வாஷிங்டன்: ஹெச்-1பி விசா குறித்து அமெரிக்காவில் இப்போது பெரும் விவாதமே நடந்து வருகிறது. தீவிர வலதுசாரி ஆதரவாளர்கள் ஹெச்-1பி விசாவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதேநேரம் தொழிலதிபர்கள் இதுபோன்ற தடைகளை எதிர்க்கிறார்கள். இதற்கிடையே ஹெச்-1பி விசா விவாதம் தொடர்பாக எலான் மஸ்க் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் ஹெச்-1பி விசா திட்டத்திற்கு வலதுசாரிகள் மத்தியில் எதிர்ப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தத் திட்டத்தால் தான் அமெரிக்கர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்பதைத் திரும்பத் திரும்ப சொல்லும் அவர்கள், ஹெச்-1பி விசா திட்டத்தை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஹெச்-1பி விசா
அதேநேரம் அங்குள்ள தொழிலதிபர்கள் ஹெச்-1பி விசா திட்டத்தை ஆதரித்து வருகிறார்கள். இதற்கிடையே ஒரு காலத்தில் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்த எலான் மஸ்கும் கூட ஹெச்-1பி விசாக்கள் தேவை என்றே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். திறமையான இந்தியர்களால் அமெரிக்கா பெரிதும் பயனடைந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல டிரேடிங் நிறுவனமான ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத் உடன் நடந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அதேநேரம் இதற்கு முன்பு H-1B விசா திட்டத்தில் சிலர் முறைகேடு செய்ததாகவும் அதன் காரணமாகவே பாலிசிக்கள் கடுமையாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எலான் மஸ்க்
அமெரிக்கர்களின் வேலைகளை வெளிநாட்டவர்கள் பறிப்பதாகச் சில வலதுசாரிகள் கருதுகிறார்கள். இது குறித்துப் பேசிய அவர், "அது எவ்வளவு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை. திறமையானவர்களுக்கு எப்போதுமே பற்றாக்குறை உள்ளது என்பதை என் நேரடி அனுபவத்தில் காண்கிறேன். சிக்கலான பணிகளைச் செய்யப் போதுமான திறமையான ஆட்களைக் கண்டுபிடிப்பதில் சிரமப்படுகிறோம். எனவே திறமையான ஊழியர்கள் அதிகம் இருப்பது நல்லது தான்" என்றார்.
டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏஐ என பல நவீன நிறுவனங்களை எலான் மஸ்க் நடத்தி வருகிறார். உலகெங்கும் உள்ள மிகவும் திறமையானவர்களைத் தனது நிறுவனங்களில் பணியமர்த்துவதில் கவனம் செலுத்துவதாக எலான் மஸ்க் கூறினார்.
தடை விதிக்கக்கூடாது
H-1B விசா திட்டத்தில் சில முறைகேடுகள் நடந்திருப்பது உண்மை தான் என்ற அவர், அதற்காக ஹெச்-1பி விசா திட்டத்தையே முழுமையாக நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும், "H-1B திட்டத்தில் சில முறைகேடுகள் நடந்துள்ளன. சில அவுட்சோர்சிங் நிறுவனங்கள் H-1B விசா திட்டத்தில் குளறுபடிகள் செய்துள்ளன. இந்த முறைகேடுகளை நாம் சரி செய்ய வேண்டும். ஆனால் H1B திட்டத்தை முழுவதுமாக நிறுத்த வேண்டும் என நான் நினைக்கவில்லை. ஹெச்-1பி விசா திட்டத்தை நிறுத்தினால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை பலரும் புரிந்து கொள்வதில்லை" என்றார்.
பல காலமாகவே H-1B விசா திட்டத்தின் மூலம் பல வெளிநாட்டினர் அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். குறிப்பாக இந்தியா மற்றும் சீன நாடுகள் இதில் அதிகம் பலன் பெறுகிறார்கள். இது அமெரிக்காவில் சென்று செட்டிலாகும் ஒரு வாய்ப்பையும் கூட வெளிநாட்டவருக்குத் தருகிறது.
டிரம்ப் நிர்வாகம்
இந்தச் சூழலில் தான் டிரம்ப் கடந்த செப்டம்பர் மாதம் H-1B விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தினார். முன்பு விசா கட்டணம் 5000 டாலராக இருந்த நிலையில், அதை $100,000 (சுமார் ₹89,47,000) டாலராக உயர்த்தினார். இதன் மூலம் H-1B விசா தடுக்க முடியும் என அவர் கூறினார். அதேநேரம் இந்தியர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
ஹெச்-1பி விசா கட்டணம் உயர்த்தப்பட்டதால் அடுத்து எங்கு டிரம்ப் அத்திட்டத்திற்குத் தடை விதிப்பாரோ எனப் பலரும் அஞ்சினர். இருப்பினும், டிரம்ப் ஹெச்-1பி விசாவுக்கு தடை விதிக்கும் திட்டத்தில் இல்லை. திறமையான வெளிநாட்டவர்களை அமெரிக்காவுக்கு வரவேற்பதாகவும், அவர்கள் சிப் மற்றும் ஏவுகணைகள் போன்ற சிக்கலான விஷயங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை அமெரிக்கர்களுக்குக் கற்றுக்கொடுப்பார்கள் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications