Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேரழிவு நிச்சயம்.. "அடுத்த 5 ஆண்டுகளில் மாபெரும் உலக போர் வெடிக்கும்.." எலான் மஸ்க் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் உலகப் போர் தொடர்பாக மிகப் பெரிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது உலகில் சீக்கிரமே ஒரு மாபெரும் போர் வெடிக்கும் என்று என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். அதுவும் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தப் போர் வெடிக்கலாம் என அவர் சொல்லியிருக்கிறார். அவரது இந்த வார்னிங் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், நியூரோலிங்க் என பல நிறுவனங்களைச் சொல்லலாம். அதேநேரம் அவர் தனது மனதுக்கு பட்டத்தையும் வெளிப்படையாகப் பேசிவிடுவார். அப்படித் தான் அதிபர் தேர்தல் சமயத்திலும் கூட அவர் வெளிப்படையாகவே டிரம்ப்பை ஆதரித்திருந்தார்.

Elon Musk Warns of Inevitable Major War Possibly Nuclear within 5-10 Years Stark Prediction

எலான் மஸ்க்

மேலும், ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர், அதிலும் ஓபனாக தனது கருத்துகளைச் சொல்லிவிடுவார். பல நேரங்களில் அதுவே ஒரு விவாதமாக மாறிவிடும். அப்படி அவர் போட்ட பதிவு தான் இப்போது ட்விட்டரில் பயங்கர டிரெண்டாகி வருகிறது. அதாவது உலகில் ஒரு பயங்கரமான மோதல் ஏற்படும் என சொல்லி இருக்கிறார். அது ஒரு அணு ஆயுதப் போராக மாறவும் கூட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளார்.

அணு ஆயுதங்கள்

சர்வதேச சமூகம் அணு ஆயுதத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதம் நடந்தது. அதில் ஹண்டர் ஆஷ் என்ற யூசர், "அணு ஆயுதங்கள் உலகின் முக்கிய வல்லரசுகளுக்கு இடையேயான போரைத் தடுத்து விடுகிறது. உலகின் மேஜர் நாடுகளுக்கு இடையேயான போர் அபாயத்தை கூட தடுத்துவிடுகிறது. இதனால் பல்வேறு நாடுகளின் செயல்திறன் கடுமையாகக் குறைந்துவிட்டன. அதாவது உலக நாடுகள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து, திறம்படச் செயல்படுவதற்கு எந்தவொரு அழுத்தங்களும் இல்லாமல் போய்விட்டன" எனப் பதிவிட்டிருந்தார். அதாவது போர் பயம் இல்லாததால் உலக நாடுகள் முறையாக செயல்படுவதில்லை என பதிவிட்டிருந்தார்.

உலகப் போர் வெடிக்கும்

அவரது இந்த போஸ்ட்டிற்கு பதிலளித்த எலான் மஸ்க், "போர் தவிர்க்க முடியாதது. அதிகபட்சம் 10 ஆண்டுகளுக்குள் (அதாவது 2030க்குள்) ஒரு மாபெரும் போர் வெடிக்கும்" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். எலான் மஸ்கின் இந்தக் கருத்து இணையத்தில் பெரும் விவாதமாக மாறியது. அவர் எதைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்பது புரியவில்லை. இதனால் பலரும் குழப்பமடைந்தனர்.

அவரை எதைச் சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள அவரது க்ரோக் செயலியிடமே சில நெட்டிசன்கள் கேட்டுள்ளனர். இதற்கு க்ரோக் அளித்த பதிலில், "எலான் மஸ்க் எந்தவொரு மோதல் அல்லது காரணத்தைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.. ஆனாலும், அவரது கடந்தகாலக் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது அவர் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெளிநாட்டினர் குடியேற்றத்தால் ஏற்படும் உள்நாட்டு போர், தைவான் விவகாரத்தில் அமெரிக்கா-சீனா மோதல்கள், உக்ரைன் போர் மூன்றாம் உலகப் போராக மாறுவது போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்" என்று பதிவிட்டுள்ளது.

3 விஷயங்கள்

அவர் மூன்று விஷயங்கள் குறித்துத் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளார். அதில் உக்ரைன் விவகாரம் அனைவருக்கும் தெரியும். ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை வெளிநாட்டினர் அதிகளவில் அங்குக் குடியேறுவதால் தங்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற கோபத்தில் ஐரோப்பியர்கள் இருக்கிறார்கள். அது உள்நாட்டு போராக வெடிக்கலாம்.

அடுத்து தைவான் விவகாரம்.. தைவான் தங்களுக்குத் தான் சொந்தம் எனச் சீனா சொல்லி வருகிறது. ஆனால், தைவான் அதை ஏற்கவில்லை. தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா இருப்பதால் சீனா- அமெரிக்கா மோதல் உருவாகும் ஆபத்தும் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+