சவுதி மன்னரை கொலை செய்ய விஷ மோதிரம்... இளவரசர் சல்மான் பற்றி திடுக்கிடும் தகவல்..!
ரியாத்: சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அந்நாட்டு முன்னாள் புலனாய்வு துறை அதிகாரி ஒருவர்.
Recommended Video
அமெரிக்காவின் முன்னணி செய்தி ஊடகமான சி.பி.எஸ்.க்கு 60 நிமிடங்கள் அவர் அளித்துள்ள பேட்டியில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் உண்மை முகத்தை தோலுரிக்கும் வகையில் துணிச்சலாக பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை பதவிக்காக இளவரசர் சல்மான் கொலை செய்ய விரும்பியதாகவும், இதற்காக விஷேச முறையில் உருவாக்கப்பட்ட விஷம் நிறைந்த மோதிரத்தை அவர் ரஷ்யாவிலிருந்து வாங்கினார் எனவும் திடுகிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

புலனாய்வு அதிகாரி
சவுதி அரேபியாவில் புலனாய்வு துறை அதிகாரியாக பணியாற்றிய சையது அல் ஜாப்ரி தற்போது உயிருக்கு அஞ்சி கனடாவில் வசித்து வருகிறார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் சதிதிட்டங்கள் அனைத்தும் தனக்கு தெரியும் என்பதால் தன்னை தீர்த்துக்கட்ட அவர் முடிவு செய்திருப்பதாகவும் தனது மரணச் செய்தியை கேட்கும் வரை அவர் அமைதியாக மாட்டார் எனவும் கூறியுள்ளார் அல்ஜாப்ரி.

விஷ மோதிரம்
மேலும், பதவிக்காக சவுதி மன்னர் அப்துல்லாவை விஷம் நிறைந்த மோதிரத்தால் கை குலுக்கி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகவும் இந்த தகவல் தனக்கு தெரிந்துவிட்டதால் தன்னை கொலை செய்ய சல்மான் துடிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே பத்திரிகையாளர் கஷோகி கொலையில் இளவரசர் சல்மான் பெயர் தொடர்புப்படுத்தப்படும் நிலையில், சவுதி அரேபியாவின் முன்னாள் புலனாய்வு துறை அதிகாரி கூறியிருக்கும் இந்த தகவல் உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சவுதி மன்னர்
கடந்த 2015-ம் ஆண்டு மன்னர் அப்துல்லா காலமானதை அடுத்து சல்மான் பின் அப்துல் அஜீஸ் சவுதி மன்னராக இருந்து வருகிறார். இவர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தந்தையாவார். சல்மான் மீது குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் புலனாய்வு துறை அதிகாரி அல் ஜாப்ரி, முன்னாள் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் நயீஃபுக்கு வலது கரமாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொய் குற்றச்சாட்டு
இதனிடையே அல் ஜாப்ரியின் குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ள சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தரப்பு, நிதி விவகாரத்தில் அவர் தவறுகளில் ஈடுபட்டதால் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக இது போன்ற புகார்களை அவர் கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் உலக நாடுகள் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications