For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதி மன்னரை கொலை செய்ய விஷ மோதிரம்... இளவரசர் சல்மான் பற்றி திடுக்கிடும் தகவல்..!

Google Oneindia Tamil News

ரியாத்: சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அந்நாட்டு முன்னாள் புலனாய்வு துறை அதிகாரி ஒருவர்.

Recommended Video

    Saudi Prince Salman பற்றி முன்னாள் அதிகாரி பரபரப்பு புகார்

    அமெரிக்காவின் முன்னணி செய்தி ஊடகமான சி.பி.எஸ்.க்கு 60 நிமிடங்கள் அவர் அளித்துள்ள பேட்டியில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் உண்மை முகத்தை தோலுரிக்கும் வகையில் துணிச்சலாக பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

    தீபாவளிக்கு முன் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்?.. அமைச்சர் விளக்கம்! தீபாவளிக்கு முன் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது ஏன்?.. அமைச்சர் விளக்கம்!

    அதன்படி மறைந்த சவுதி மன்னர் அப்துல்லாவை பதவிக்காக இளவரசர் சல்மான் கொலை செய்ய விரும்பியதாகவும், இதற்காக விஷேச முறையில் உருவாக்கப்பட்ட விஷம் நிறைந்த மோதிரத்தை அவர் ரஷ்யாவிலிருந்து வாங்கினார் எனவும் திடுகிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

    புலனாய்வு அதிகாரி

    புலனாய்வு அதிகாரி

    சவுதி அரேபியாவில் புலனாய்வு துறை அதிகாரியாக பணியாற்றிய சையது அல் ஜாப்ரி தற்போது உயிருக்கு அஞ்சி கனடாவில் வசித்து வருகிறார். சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் சதிதிட்டங்கள் அனைத்தும் தனக்கு தெரியும் என்பதால் தன்னை தீர்த்துக்கட்ட அவர் முடிவு செய்திருப்பதாகவும் தனது மரணச் செய்தியை கேட்கும் வரை அவர் அமைதியாக மாட்டார் எனவும் கூறியுள்ளார் அல்ஜாப்ரி.

    விஷ மோதிரம்

    விஷ மோதிரம்

    மேலும், பதவிக்காக சவுதி மன்னர் அப்துல்லாவை விஷம் நிறைந்த மோதிரத்தால் கை குலுக்கி கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகவும் இந்த தகவல் தனக்கு தெரிந்துவிட்டதால் தன்னை கொலை செய்ய சல்மான் துடிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே பத்திரிகையாளர் கஷோகி கொலையில் இளவரசர் சல்மான் பெயர் தொடர்புப்படுத்தப்படும் நிலையில், சவுதி அரேபியாவின் முன்னாள் புலனாய்வு துறை அதிகாரி கூறியிருக்கும் இந்த தகவல் உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

     சவுதி மன்னர்

    சவுதி மன்னர்

    கடந்த 2015-ம் ஆண்டு மன்னர் அப்துல்லா காலமானதை அடுத்து சல்மான் பின் அப்துல் அஜீஸ் சவுதி மன்னராக இருந்து வருகிறார். இவர் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தந்தையாவார். சல்மான் மீது குற்றஞ்சாட்டியுள்ள முன்னாள் புலனாய்வு துறை அதிகாரி அல் ஜாப்ரி, முன்னாள் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் நயீஃபுக்கு வலது கரமாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பொய் குற்றச்சாட்டு

    பொய் குற்றச்சாட்டு


    இதனிடையே அல் ஜாப்ரியின் குற்றச்சாட்டை அடியோடு மறுத்துள்ள சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தரப்பு, நிதி விவகாரத்தில் அவர் தவறுகளில் ஈடுபட்டதால் பணியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக இது போன்ற புகார்களை அவர் கூறிவருவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் உலக நாடுகள் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் செயல்பாடுகளை தீவிரமாக கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Ex Saudi officer Al jabri complaint about Prince salman
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X