Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேஜர்களை தொடர்ந்து வெடித்து சிதறிய வாக்கி டாக்கி, செல்போன்! லெபனான், சிரியாவில் உச்சக்கட்ட பதற்றம்

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: லெபானானில் பேஜர்கள் வெடித்ததில், 10க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பேஜர்களை தொடர்ந்து, தற்போது வாக்கி டாக்கி, செல்போன், லேப்டாப் வெடிக்க தொடங்கியுள்ளன. இதில் 3 பேர் வரை உயிரிழந்ததுள்ளனர்.

ஆரம்ப காலத்தில் இஸ்ரேல் என்கிற ஒரு நாடே கிடையாது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜெர்மன் தாக்குதலுக்கு பயந்து புலம்பெயர்ந்த ஜியோனிஸ்ட்கள் எனப்படும் ஒரு இனக்குழுக்கள்தான் இஸ்ரேலை உருவாக்கினார்கள். பாலஸ்தீனத்தை உடைத்துதான் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. இதற்கு பின்னால் அமெரிக்காவும், பிரிட்டனும் இருந்தது தனிக்கதை. இப்படி உருவான இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமிக்க தொடங்கியது. இதுதான் போரின் தொடக்கப்புள்ளி.

lebanon syria israel

அவ்வப்போது பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதும், இதற்கு எதிராக பாலஸ்தீன விடுதலை குழுக்கள் பதில் தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாக இருந்து வந்தது. இப்படி இருக்கையில், முதன் முறையாக இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தாக்குதலை நடத்தியது. இதில் 1000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டாலும், அவர்களின் சடலங்கள் கிடைக்காததால், இந்த இறப்புகளை உறுதி செய்ய முடியவில்லை.

இருப்பினும், இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக அறிவித்த இஸ்ரேல் தீவிர போரை அறிவித்தது. இந்த போரில் இது வரை 41,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பசியும், சுகாதார பாதிப்புகளும் அம்மக்களை துரத்திக்கொண்டிருக்கிறது.

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தினால், அண்டை இஸ்லாமிய நாடுகள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. குறிப்பாக லெபனானிலிருந்து இயங்கி வரும் ஹில்புல்லா அமைப்பு, இந்த போரின் போக்கையே மாற்றும் அளவுக்கு தலையீடு செய்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது. ஒரு கட்டத்தில் ஹமாஸை கூட சமாளித்துவிடலாம் போல.. ஆனா ஹிஸ்புல்லாவை சமாளிப்பது தலைவலியாக இருக்கிறது என்பதை இஸ்ரேல் உணர்ந்துக்கொண்டது.

ஆனால், அதிகாரப்பூர்வமாக லெபனான் மீது இஸ்ரேலால் போரை தொடுக்க முடியாது. அப்படி செய்தால் ரஷ்யா இந்த போரில் தலையிட தொடங்கிவிடும். அப்படி மட்டும் நடந்தால், இஸ்ரேலின் கதை மொத்தமாக முடிந்துவிடும். எனவே, என்ன செய்யவது என்று யோசித்து வந்த இஸ்ரேல் தற்போது பேஜர் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 10க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கையில், தற்போது லேப்டாப், வாக்கி டாக்கி, செல்போன்கள், சூரிய மின்சக்தி கலன்கள் உள்ளிட்டவையும் வெடிக்க தொடங்கியுள்ளன. லெபனான் மட்டுமல்லாது சிரியாவிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. எனவே, அனைத்து மின்னணு சாதனங்களையும் அனைத்து வைக்குமாறு லெபனான் அரசு மக்களுக்கு கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த தாக்குதலில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+