இளம் மாணவி அனிதாவுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை கண்ணீர் அஞ்சலி
நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவி அனிதாவுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.
மின்னாபோலிஸ்: நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மாணவி அனிதாவுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை தமது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறது.
இது தொடர்பாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை செயலாளர் இரமாமணி செயபாலன் வெளியிட்ட அறிக்கை:

நீட் என்ற மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வினால், வாழ்க்கையில் மருத்துவராக வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன் தன் குடும்ப வறுமையெல்லாவற்றையும் பொருட்படுத்தாது, தன் இலட்சியக் கனவை அடையும் வகையில் அயராதுழைத்து மிகஅதிக மதிப்பெண்கள் பெற்றும், உச்சநீதி மன்றத்தின் படியேறி கதவுகளைத் தட்டியும், சமூக நீதிக்கான அத்துணை வழிகளும் அடைக்கப்பட்டதை தாங்க இயலாத மருத்துவராக வலம்வர இருந்த, அரியலூர் மாவட்டத்தில், குழுமூர் என்னும் குக்கிராமத்தில் பிறந்த அனிதா என்ற ஒரு மொட்டின் வாழ்க்கை அநியாயமாகப் பறிக்கப்பட்டதற்கு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கின்றது. இது மிகவும் வருந்தத்தக்க செய்தி.
நீட் தேர்வினால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்ற தமிழக மாணவர்கள், இது போன்று மற்றும் ஒரு துயர சம்பவம் நடவாமல் தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்யவேண்டும் என்று வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றது. மேலும், மாணவர்களும் இது போன்ற தங்களை மாய்த்துக்கொள்ளும் துயரச் சம்பவங்களில் ஈடு படாமல் பொறுமை காத்திட அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். இது குறித்து வட அமெரிக்காவில் உள்ள பல தமிழ்ச்சங்களும், பல தமிழ் அமைப்புகளும் தங்கள் பகுதிகளில் இரங்கல் கூட்டங்கள் நடத்துவதற்கு, ஏற்பாடுகள் மிக துரிதாமாக செய்யப்பட்டு வருகின்றது.
தமிழ் ஆர்வலர்களும், உணர்வாளர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் நடைபெறும் இரங்கல் கூட்டங்களில் கலந்து கொண்டு நமது உணர்வையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துமாறு பேரவையின் சார்பில் அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
இளம் தளிர் அனிதாவின் மறைவிற்கு பேரவையின் ஆழ்ந்த இரங்கலை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications