நாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது காஸ்ட்ரோவின் அஸ்தி...
மறைந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி நாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது. நாடு முழுவதும் அவருக்கு மக்கள் அஞ்சலி செலுத்த இவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது.
ஹவானா: கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி நாடு முழுவதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
கியூபாவின் பிரதமர் மற்றும் அதிபர் என 50 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக விளங்கியவர் பிடல் காஸ்ட்ரோ. புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ தனது 50 ஆண்டு பதவிகலாத்தில் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
உடல்நலக்குறைவால் கடந்த 2008ஆம் ஆண்டு தனது சகோதரர் ரால் காஸ்ட்ரோவிடம் ஆட்சியை ஒப்படைத்தார். உடல்நலக்குறைவால் தனது 90 வயதில் நேற்று முன்தினம் காலமானார்.

சோகம் - கண்ணீர் அஞ்சலி
அவரது மறைவால் சோகத்தில் ஆழ்ந்துள்ள அந்நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் பல்வேறு இடங்களில் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசுப் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஸ்ட்ரோ உடல் தகனம்
இந்நிலையில் காஸ்ட்ரோவின் விருப்பப்படி அவரது உடல் அவரது மறைவுக்குப் பின்னர் உடனடியாக தகனம் செய்யப்பட்டது. ஹாவானாவில் உள்ள ஜோஸ் மார்டி நினைவிடத்தில் அவரது அஸ்தி இன்றும் நாளையும் வைக்கப்படும் என்றும் அங்கு கியூப மக்கள் அவருக்கு பிரியாவிடை கொடுப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்வலமாக செல்லும் அஸ்தி
அவரது அஸ்தி நவம்பர் 30ஆம் தேதி முதல் டிசம்பர்3 ஆம் தேதி வரை கேரவன் வேன் மூலமாக ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாவானாவில் இருந்து சான்டியாகோ வரை நாடு முழுவதும் சுமார் 900 கிலோ மீட்டர் ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது.

பிரமாண்ட இறுதி ஊர்வலம்
இதைத்தொடர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பிரமாண்ட இறுதி ஊர்வலமும் நடைபெறு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கியூபா மக்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச்சடங்கு
அன்றைய நாள் அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. சாண்டியாகோ நகரில் உள்ள கல்லறையில் பிடல் காஸ்ட்ரோவின் அஸ்தி புதைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications