மக்கள் ஜனாதிபதி கலாமிற்கு சிங்கப்பூரில் இரங்கல் கூட்டம் - எப்.ஐ.எம் ஏற்பாடு
சிங்கப்பூர்: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நிகழ்ச்சி ஒன்றினை சிங்கப்பூர் இந்திய முஸ்லிம்கள் அமைப்பு (எப்.ஐ.எம்) மற்றும் சிங்கப்பூரின் 17 முஸ்லிம் அமைப்புகள் இணைந்து இன்று ஏற்பாடு செய்துள்ளன.
மேகாலாயாவில் ஐ.ஐ.எம் கல்வி நிறுவனத்தில் ஜூலை 27ம் தேதியன்று மாலை மாணவர்களிடையே உரையாற்றுகையில் அப்துல் கலாம் அவர்கள் மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில் மறைந்த கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவருடைய திறமைகளை நினைவு கூறும் வகையிலும் சிங்கப்பூர் வாழ் இந்திய முஸ்லிம்கள் அமைப்பு இரங்கல் கூட்டம் ஒன்றிற்கு இன்று ஏற்பாடு செய்துள்ளது.
இன்று மாலை 7.30 மணியளவில் மஸீத் பென்கோலன் மல்டி பர்பஸ் ஹால், சிங்கப்பூரில் நடைபெறும் அஞ்சலி கூட்டத்திற்கு சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் அனைவரையும் அழைத்துள்ளது எப்.ஐ.எம். பங்கேற்க விரும்புபவர்கள் தொடர்புகொள்ள டாக்டர்.கே.எம்.தீன் - 94887401, பரிஹுல்லா-93856345 ஆகிய எண்களில் மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications