சீன ஆய்வகத்தில் பிறந்த குளோனிங் குரங்குகள்
உலகின் முதல் குளோனிங் மறிஆடு உருவாக்கப்பட்ட அதே தொழிற்நுட்பத்தில் சீனா ஆய்வகத்தில் இரண்டு குரங்குகள் பிறந்துள்ளன.
சில வாரங்களுக்கு முன் சீன ஆய்வகத்தில், சோங் சோங் மற்றும் ஹுவா ஹூவா என்று பெயரிடப்பட்ட இரண்டு நீண்ட வாள் குரங்குகள் பிறந்தன.
மரபணு மாற்றப்பட்ட குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது, மனித நோய்கள் குறித்த ஆய்வுகளுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதற்கு எதிர்ப்பும் இல்லாமல் இல்லை.
- ''குத்துப்பாட்டு ஆடுவதோ, பத்துப் பேரை அடிப்பதோ ஹீரோயிசம் இல்லை''
- இந்தியாவின் பிரபல "ஹெப்பர்ஸ் கிட்சன்" வெற்றிக்குப்பின் இருக்கும் பெண்
இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவது மனிதர்களை குளோனிங் செய்வதில் கொண்டு போய் நிறுத்தும் என்கிறார்கள் விமர்சகர்கள்.
சீன நரம்பியல் கல்வி நிறுவனத்தை சேர்ந்த குயிங் சன், குளோனிங் செய்யப்பட்ட இந்த குரங்குகள் மரபணுவினால் ஏற்படும் ,புற்று நோய், வளர் சிதை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு கோளாறுகள் குறித்து ஆய்வு செய்ய உதவும் என்கிறார்.
சோங் சோங் என்ற குரங்கு எட்டு வாரங்களுக்கு முன் பிறந்திருக்கிறது. ஹுவா ஹூவா ஆறு வாரங்களுக்கு முன் பிறந்திருக்கிறது.
குரங்குகளுக்கு நன்றாக வளர்கின்றன. அதற்கு புட்டி பால் தரப்படுகிறது என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
வரும் மாதங்களில் குளோனிங் முறையில் அதிகமான குரங்குகளுக்கு பிறப்பு கொடுக்கப்படும் என்கிறார்கள் அவர்கள்.
எதிர்ப்பு
லண்டன் ஃபிரான்சிஸ் கிரிக் நிறுவனத்தை சேர்ந்த பேராசிரியர் ராபின், இந்த இரண்டு குரங்குகளையும் குளோனிங் செய்ய பயன்படுத்தப்பட்ட தொழிற்நுட்பம் மிகவும் அபாயகரமானது மற்றும் திறனற்றது என்கிறார்.
கெண்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டர்ரென் கிரிஃப்பின், இந்த குளோனிங் மனித நோய்கள் குறித்து புரிந்துக் கொள்ள பயன்படும் என்கிறார். அதே வேளை, நெறிமுறை சார்ந்த கவலைகளையும் பகிர்கிறார். குளோனிங் குறித்த நெறிமுறைகளை வடிவமைப்பதில் அதிக அக்கறை தேவைப்படுகிறது.
இது போன்ற ஆய்வுகள் எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும், எப்படி செயல்படுத்தப்படவேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும் என்கிறார் அவர்.
எடின்பெர்க்கில் உள்ள ரோஸ்லின் நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு டோலி என்று அழைக்கப்படும் முதல் மறிஆடு குளோனிங் செய்யப்பட்டது. மடியிலிருந்து எடுக்கப்பட்ட உயிரணுவை கொண்டு உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி டோலி தான்.
- சென்னையிலிருந்து பெங்களூருக்கு 20 நிமிடத்தில் செல்ல முடியும்
- புற்றுநோயைக் கண்டறிய ஒரு ரத்தப்பரிசோதனை போதுமா?
உயிரணு மாற்று தொழிற்நுட்பம் மூலம், பன்றிகள், நாய்கள், பூனைகள், எலிகள் உட்பட பல உயிரினங்கள் குளோன் செய்யப்பட்டு இருக்கின்றன.
பல தடைகளை தாண்டி
சரியாக 79 தோல்விகளுக்குப் பின் இந்த இரு குரங்குகளும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு முன், வெவ்வேறு உயிரணுக்களிலிருந்து இரண்டு குரங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவை விரைவில் இறந்துவிட்டன.
ஆய்வாளர் சன் , "நாங்கள் பல்வேறு தொழிற்நுட்பங்களை முயற்சித்து பார்த்தோம். ஆனால், இது மட்டும்தான் வெற்றி பெற்றது. பல தடைகளை கடந்துதான் இந்த குரங்குகளை உருவாக்கி இருக்கிறோம்" என்கிறார்.
அமெரிக்காவின் தேசிய சுகாதார அமைப்பு வகுத்த நெறிமுறைகளை பின்பற்றியே இந்த குளோனிங் முறை மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பிற செய்திகள்
- தென்கொரியா: மருத்துவமனையில் தீ விபத்து, 41 நோயாளிகள் பலி
- 18 லட்சம் சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்கா திட்டம்
- திருநங்கைகளுக்கு அரசுத் திட்டங்களைக் கொண்டு செல்ல பிரத்யேக முயற்சி
- ஒரு பெண்ணின் பார்வையில் 'பத்மாவத்' திரைப்படம்
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி













Click it and Unblock the Notifications