பிரிட்டனின் கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரை புதைமணலில் சிக்கி 5 ஈழத் தமிழ் இளைஞர்கள் உயிரிழந்த பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: கிழக்கு பிரிட்டனின் கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரை புதைமணலில் சிக்கிய 5 ஈழத் தமிழ் இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் விடுமுறையையொட்டி கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரைக்கு கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோர் சென்றுள்ளனர். அங்கு மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்த இவர்கள் திடீரென புதைமணலில் சிக்கினர்.

ஆனால் அக்கடற்கரையில் போதுமான மீட்பு பணியாளர்கள் இல்லாததால் 5 ஈழத் தமிழ் இளைஞர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. இதனால் 5 ஈழத் தமிழ் இளைஞர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களில் குருசாந்த், பிரிட்டிஸ் தமிழ்ஸ் கிரிக்கெட் லீக் அணியில் இடம்பெற்றிருந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications