தாவூத் இப்ராஹிம் கராச்சி 'ஒயிட் ஹவுசில்' இருக்கிறார்.. முதல் முறையாக ஒப்புக் கொண்ட பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: இந்தியாவால் தேடப்பட்டு வரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், தங்கள் நாட்டில் இருப்பதே பாகிஸ்தான் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
Recommended Video
மும்பையில் சட்டவிரோத தொழில்கள் மூலமாக பெரும் சாம்ராஜ்யத்தை நடத்தி வந்தவர் தாவுத் இப்ராஹிம். 1993ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் இவர் மூளையாக செயல்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.
அவ்வப்போது இந்தியா இதற்கான ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் முன்பாக வைத்து, தாவூத் இப்ராகிமை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்த போதிலும் பாகிஸ்தான் அதை ஒப்புக் கொள்ளவே இல்லை.

ஒயிட் ஹவுஸ்
ஆனால் சர்வதேச நிதி நடவடிக்கை பணி குழுவிடம் பாகிஸ்தான் சனிக்கிழமை வழங்கிய அறிக்கை ஒன்றில் தாவூத் இப்ராஹிம் தங்கள் நாட்டில் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளது. கராச்சி நகரத்தில் ஒயிட் ஹவுஸ் என்று அழைக்கப்படும் ஒரு கட்டிடத்தில் தாவூத் இப்ராஹிம் வசிப்பதாக அந்த அறிக்கையில் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஒயிட் ஹவுஸ் என்பது அமெரிக்க அதிபர் மாளிகையின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்பல் பட்டியல்
2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு பாகிஸ்தானை சாம்பல் பட்டியலில் வைத்தது. அந்த நாட்டிலிருந்து செயல்படக்கூடிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்குவதில் பாகிஸ்தான் முனைப்பு காட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 2019ஆம் ஆண்டு இறுதிக்குள் தீவிரவாத குழுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பு உத்தரவிட்டது. ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பாகிஸ்தான் அதை செய்யவில்லை.

88 தீவிரவாத இயக்கங்கள்
இருப்பினும் கொரோனா பரவல் காரணமாக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் சர்வதேச நிதி நடவடிக்கை பணி குழுவிடம் பாகிஸ்தான் சனிக்கிழமை வழங்கிய பட்டியலில் தங்கள் நாட்டில் செயல்படக்கூடிய 88 தீவிரவாத இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் நிதி நடவடிக்கைகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கருப்பு பட்டியலில் இருந்து தப்பிக்க
அதில் ஒரு தீவிரவாத அமைப்பின் தலைவனாக தாவூத் இப்ராகிமை பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது. பாகிஸ்தான் வெளிப்படையாக நடந்து கொள்ளாவிட்டால், ஈரான், வடகொரியா மாதிரி, இந்த நாட்டையும் கருப்பு பட்டியலில் சேர்க்க சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு உத்தரவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்தான் பாகிஸ்தான் நல்ல பிள்ளைபோல இவ்வாறு ஒரு பட்டியலை நீட்டி உள்ளது என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

நடவடிக்கைகள் என்ன?
தாவூத் இப்ராஹிமின் பண பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆயுத கொள்முதல் தடுக்கப்பட்டுள்ளதாகவும், பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தாவூத் மீது மட்டுமல்ல, 26/11 மும்பை தாக்குதல் சூத்திரதாரி மற்றும் ஜமாத்-உத்-தாவா (ஜுடி) தலைவர் ஹபீஸ் சையீத், ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஎம்) தலைவர் மசூத் அசார் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் முக்கிய நபர்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்து பாகிஸ்தான் அரசு ஆகஸ்ட் 18ம் தேதியன்று இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவர்களின் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் பறிமுதல் செய்வதற்கும், அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கும் பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications