ஹெட்லியின் வாக்குமூலம் அத்தனையும் கற்பனையாம்... 'ரா' ஏஜெண்ட்டாம்...சொல்வது பாகிஸ்தான் மாஜி அமைச்சர்
இஸ்லாமாபாத்: அமெரிக்கா சிறையில் இருக்கும் பயங்கரவாதி ஹெட்லி மும்பை தாக்குதல் தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் அளித்துள்ள வாக்குமூலம் கற்பனையானது; ஹெட்லி ஒரு 'ரா' ஏஜெண்ட் என பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறியுள்ளார்.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் தொடர்பு கொண்டிருந்ததாக அமெரிக்காவில் வாழும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.

இந்த தாக்குதல் தொடர்பான வழக்கில் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள அவர் அமெரிக்காவில் சிறையில் உள்ளார். மும்பை தாக்குதல் வழக்கில் தற்போது அப்ரூவர் ஆகியுள்ள அவர், வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அதில் மும்பை தாக்குதலுக்கும் பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்குமான தொடர்புகளை அம்பலப்படுத்தி வருகிறார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் 2 நாட்கள் வாக்குமூலம் அளித்திருந்தார் ஹெட்லி. தொழில் நுட்பகோளாறு காரணமாக நேற்று ஹெட்லி வாக்குமூலம் அளிக்கவில்லை.
ஹெட்லியின் வாக்குமூலத்தால் மும்பை தாக்குதலில் பாகிஸ்தானின் பங்கு இருந்தது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஹெட்லியின் வாக்குமூலத்தை பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ரஹ்மான் மாலிக் நிராகரித்துள்ளார்.
மும்பை தாக்குதலின் போது பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராக இருந்த அவர், ஹெட்லியின் வாக்குமூலம் பொய்களின் தொகுப்பு என கூறியுள்ளார்.
மும்பையில் தாக்குதலை அரங்கேற்ற ஹெட்லியை இந்திய உளவு அமைப்பான ரா நியமித்து விட்டு, தற்போது அவரிடம் இருந்து கற்பனையான வாக்குமூலங்களை பெறுவதாகவும், இதன் மூலம் பாகிஸ்தானுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாகவும் இந்தியா மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications