பொலிவியா: கனமழையால் மண் சரிவில் புதைந்த கிராமம் - 4 பேர் பலி, 9 பேர் மாயம்
Subscribe to Oneindia Tamil
லா பாஸ்: பொலிவியாவில் மலையடிவார கிராமம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் மண் சரிவில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மாயமான 9 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பொலிவியாவில் கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக மொரோசோடா பகுதிக் கிராமம் ஒன்றில் நேற்று மண் சரிவு ஏற்பட்டது. அதில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
இது குறித்து மோரோசொடா மாநகராட்சியின் அதிகாரி ஜமீனா கூறுகையில், ‘இங்குள்ள கிராமம் ஒன்றில் ஏற்பட்ட மண் சரிவில் வீடுகள் மண்ணிற்குள் புதைந்துள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். 9 பேர் மாயமாகியுள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications