அமெரிக்காவில் பேருந்துகள் மோதி கோர விபத்து - 4 மாணவர்கள் பலி; 51 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவில் இரண்டு பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் வடக்கு சியாட்டில் கல்லூரியை சேர்ந்த சுமார் 45 மாணவர்களும், ஊழியர்களும் சர்வதேச நிகழ்ச்சி ஒன்றுக்காக பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். இதில் பல்வேறு வெளிநாட்டு மாணவர்களும் இருந்தனர்.
இந்த பஸ் சியாட்டில் நகரின் புகழ்பெற்ற அவுரோரா பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த பஸ் ஒன்று திடீரென மாணவர்கள் சென்ற பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் 4 வெளிநாட்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 51 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்த மாணவர்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருகின்றது.












Click it and Unblock the Notifications