அமெரிக்க படைகள் மீது ஈரான் மீண்டும் சரமாரியாக ஏவுகணை தாக்குதல்.. உச்சகட்ட பரபரப்பு
Recommended Video
பாக்தாத்: பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்திருந்த ஈரான் திடீரென அமெரிக்க படைகள் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் அங்கு உச்ச கட்ட பரபப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை ஆளில்லா ட்ரோன்கள் மூலம் அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது. இந்த சம்பவத்திற்கு பிறகு கடும் கோபம் அடைந்த ஈரான் , ஈராக்கில் முகாமிட்டுள்ள ஐந்தாயிரம் அமெரிக்க படை வீரர்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 80 அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் சொன்னது.
ஆனால் தாக்குதல் நடந்தது உண்மை தான் என்றும் சிறிய அளவிலேயே சேதம் ஏற்பட்டது என்றும் அமெரிக்க படை வீரர்கள் யாரும் சாகவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

175 பேர் உயிரிழப்பு
இந்த சூழ்நிலையில் ஈரானில் இருந்து 175 பயணிகளுடன் சென்ற உக்ரைன் விமானத்தை குறிவைத்து தவறுதலாக ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன.

ஈரான் தாக்குதல்
இந்த சூழலில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்து இருந்தது. போரை விரும்பவில்லை என்று கூறியிருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள ஈராக்கில் உள்ள பாலாட் விமானப்படை தளத்தின் மீது ஈரான் ராணுவம் ஏழு முறை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 4 வீரர்கள் காயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவரவில்லை.

4 பேர் காயம்
ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு வடக்கே 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பாலாட் ஏர் பேஸின் ஓடுபாதையில் இந்த தாக்குதல் 8முறை நடந்திருப்பதாக ஈராக் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்களை ஈராக்கிய வீரர்கள் என இராணுவ வட்டாரங்கள் அடையாளம் கண்டுள்ளன. அமெரிக்க வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று சொல்கிறார்கள்.

வெளியேறியது
கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தொடர்ந்து பாக்தாத்தின் வடக்கே அல்-பாலாத் விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானப் படையினர் பெரும்பான்மையானவர்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர் என்று ஈராக் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈராக் சொல்லவில்லை
ஈராக் இராணுவ அறிக்கையில் தாக்குதலுக்குப் பின்னால் யார் என்று கூறவில்லை, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications