அமெரிக்க படைகள் மீது ஈரான் மீண்டும் சரமாரியாக ஏவுகணை தாக்குதல்.. உச்சகட்ட பரபரப்பு
Recommended Video
பாக்தாத்: பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்திருந்த ஈரான் திடீரென அமெரிக்க படைகள் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் அங்கு உச்ச கட்ட பரபப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் ராணுவ தளபதி சுலைமானியை ஆளில்லா ட்ரோன்கள் மூலம் அமெரிக்க ராணுவம் சுட்டுக்கொன்றது. இந்த சம்பவத்திற்கு பிறகு கடும் கோபம் அடைந்த ஈரான் , ஈராக்கில் முகாமிட்டுள்ள ஐந்தாயிரம் அமெரிக்க படை வீரர்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 80 அமெரிக்க படை வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் சொன்னது.
ஆனால் தாக்குதல் நடந்தது உண்மை தான் என்றும் சிறிய அளவிலேயே சேதம் ஏற்பட்டது என்றும் அமெரிக்க படை வீரர்கள் யாரும் சாகவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

175 பேர் உயிரிழப்பு
இந்த சூழ்நிலையில் ஈரானில் இருந்து 175 பயணிகளுடன் சென்ற உக்ரைன் விமானத்தை குறிவைத்து தவறுதலாக ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் கோபத்தில் உள்ளன.

ஈரான் தாக்குதல்
இந்த சூழலில் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்து இருந்தது. போரை விரும்பவில்லை என்று கூறியிருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ள ஈராக்கில் உள்ள பாலாட் விமானப்படை தளத்தின் மீது ஈரான் ராணுவம் ஏழு முறை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 4 வீரர்கள் காயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இதுவரை தெரியவரவில்லை.

4 பேர் காயம்
ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு வடக்கே 80 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பாலாட் ஏர் பேஸின் ஓடுபாதையில் இந்த தாக்குதல் 8முறை நடந்திருப்பதாக ஈராக் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. காயமடைந்தவர்களை ஈராக்கிய வீரர்கள் என இராணுவ வட்டாரங்கள் அடையாளம் கண்டுள்ளன. அமெரிக்க வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று சொல்கிறார்கள்.

வெளியேறியது
கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்களைத் தொடர்ந்து பாக்தாத்தின் வடக்கே அல்-பாலாத் விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க விமானப் படையினர் பெரும்பான்மையானவர்கள் ஏற்கனவே வெளியேறிவிட்டனர் என்று ஈராக் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈராக் சொல்லவில்லை
ஈராக் இராணுவ அறிக்கையில் தாக்குதலுக்குப் பின்னால் யார் என்று கூறவில்லை, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பதட்டங்கள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
-
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு!










Click it and Unblock the Notifications