நூற்றாண்டில் கூட இத்தனை பேர் சாகவில்லை.. ஒன்றரை ஆண்டுகளில் 230 பேரை தீவிரவாதத்திற்கு இழந்த பிரான்ஸ்
பாரீஸ்: ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸில்தான் கடந்த ஓராண்டாக தீவிரவாத தாக்குதல் மிதமிஞ்சிய அளவுக்கு பெருகியுள்ளது. கடந்த வருடம், செப்டம்பரில், சார்லி ஹெப்டோ என்ற பத்திரிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகு பல்வேறு அசம்பாவிதங்களை அந்த நாடு சந்தித்து வருகிறது.
இதில் முக்கியமான சில தாக்குதல்களை பாருங்கள்:

2015ம் ஆண்டு, ஜனவரி 7: 'சார்லி ஹெப்டோ' பத்திரிகை அலுவலகம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திவிட்டு, தப்பியோடியவர்கள் யூத மார்க்கெட் பகுதியில் போலீசாரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
ஏப்ரல் 10: பாரீசில் பெண் ஒருவர், காரில் சுடப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். கொலையாளி என, அல்ஜீரியாவை சேர்ந்த ஐடி மாணவர் சையத் அகமது என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஐஎஸ்ஐஎஸ்தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. கிறிஸ்தவ ஆலயத்தில் தாக்குதல் நடத்த சையத் அகமது திட்டமிட்டிருந்தாராம்.
ஜுன் 26: ஒருவரை கொலை செய்து அவரது தலையை சுற்றி ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கொடியை நட்டு வைத்திருந்த யாஷீன் அலி என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
நவம்பர் 13: பாரீசின் ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து-பிரான்ஸ் அணிகள் மோதிய கால்பந்து ஆட்டத்தை பிரான்ஸ் அதிபர் ஹாலாண்டேவும் பார்த்துக் கொண்டிருந்தபோது, நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 9 பேர் பலியாகினர். தொடர்ந்து பட்சாலன் மண்டபத்தில் நடந்தப்பட்ட தாக்குதலுக்கு 130 பேர் பலியாகினர். இந்த ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், இரு தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டது.
ஜுலை 14: நைஸ் நகர உள்ளூர் திருவிழாவில் பங்கேற்க கூடியிருந்தோரை குறி வைத்து லாரி மூலம் தாக்குதல் நடத்தியதில், 80 பேர் உயிரிழந்தனர்.
இப்படியாக, சிறிதும் பெரிதுமாக நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்கு, கடந்த ஆண்டு முதல் இதுவரை 230க்கும் அதிகமானோரை பலி கொடுத்துள்ளது பிரான்ஸ். அதற்கு முந்தைய 100 ஆண்டுகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் பலி எண்ணிக்கையை கூட்டினால்கூட இந்த ஒன்றரை வருடத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கைதான் அதிகம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications