விபத்துகளை தவிர்க்க துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம்
துபாய்: துபாயில் இலவச வாகன பரிசோதனை முகாம் இன்று முதல் 05.06.2015 வரை நடைபெறுகிறது என அப்கிரேட் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.எஸ். ஹமீது தெரிவித்துள்ளார்.
துபாயில் கோடைக்காலம் துவங்கிவிட்டதையொட்டி வாகனம் மற்றும் வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்த பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.
இப்பரிசோதனை முகாமில் டயர், ஏசி, பிரேக், பேட்டரி உள்ளிட்டவைகள் முக்கியமாக பரிசோதிக்கப்பட்டு தகுதி வாய்ந்த டெக்னீஷியன்கள் உரிய ஆலோசனை வழங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன பரிசோதனை முகாமில் பங்கேற்க விரும்புவர்கள் 050 269 53 53 / 04 28 38 672 எனும் அலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து தங்களது வருகையினை தெரியப்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அமீரகத்தில் கோடைக்காலத்தில் நடைபெறும் வாகன விபத்துகள் அதிக அளவில் டயர்களின் முறையான பராமரிப்பின்மை காரணமாக நடைபெறுவதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரத்யேகமாக இம்முகாமிற்கு அப்கிரேட் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications