பாரீஸ் பயங்கரத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளே காரணம்- பதிலடி நிச்சயம்...: பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே
பாரீஸ்: பாரீஸில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்தான் காரணம் என்று பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே குற்றம்சாட்டியுள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். 8 தீவிரவாதிகள் குழுக்களாகப் பிரிந்து தாக்குதலை நடத்தினர். உலகை உலுக்கிய இத்தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே, பிரான்ஸ் மீது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் யுத்தத்தை நடத்தியுள்ளனர்.

வெளிநாட்டில் நன்கு திட்டமிடப்பட்டு உள்நாட்டு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது இந்தத் தாக்குதல்.
இதற்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம். 2-ஆம் உலகப் போருக்குப் பின்னர் பிரான்சில் நிகழ்த்தப்பட்ட மிக பயங்கர தாக்குதல். இந்த தாக்குதலில் 127 பேர் பலியாகி உள்ளனர். இத்தாக்குதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications