ஈராக் செல்லும் பிரான்ஸ் அதிபர்: தீவிரவாதிகளை அடக்குவது குறித்து ஆலோசனை
பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்ட் வரும் வெள்ளிக்கிழமை ஈராக் செல்கிறார்.
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்ட் வரும் 12ம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை ஈராக் செல்கிறார். அவர் தீவிரவாதிகளை அடுக்குவது குறித்து பாக்தாதில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.

ஈராக்கின் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு வரும் 15ம் தேதி பிரான்ஸில் நடக்க உள்ள நிலையில் ஹாலண்ட் ஈராக் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றி நாட்டில் சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுவது குறித்து ஹாலண்ட் ஈராக் அதிகாரிகளுடன் பேசுகிறார்.
இது குறித்து பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜீன் ஈவ்ஸ் லீ ட்ரியன் கூறுகையில்,
ஐஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை எதிர்த்து போராட பிரான்ஸ் ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்படலாம் என்றார்.












Click it and Unblock the Notifications