அபுதாபி இந்திய தூதரகத்தில் நடந்த காந்தி ஜெயந்தி விழா
அபுதாபி: அபுதாபி இந்திய தூதரக அரங்கத்தில் மகாத்மா காந்தியடிகள் பிறந்த தினத்தையொட்டி சர்வதேச வன்முறை எதிர்ப்பு நாள் 02.10.2015 அன்று நடைபெற்றது.
இந்த விழாவுக்கு காந்திய சாகித்ய வேதி என்ற அமைப்பு இந்திய தூதரகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. விழாவினை இந்திய தூதர் டி.பி. சீத்தாராம் துவக்கி வைத்தார். அவர் காந்தியடிகளின் அகிம்சை சிந்தனைகளை நினைவு கூர்ந்தார்.
விழாவுக்கு காந்திய சாகித்ய வேதி அமைப்பின் புரவலரும், தொழில் அதிபருமான சுதிர் குமார் ஷெட்டி தலைமை வகித்தார்.
காந்தி ஜெயந்தியையொட்டி அமீரகத்தில் உள்ள இந்தியப் பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை காந்திய சாகித்ய வேதி அமைப்பின் தலைவர் தாமோதரன், பொதுச் செயலாளர் இர்ஷாத் உள்ளிட்ட குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.