ரஷ்யாவில் சிலிண்டர் வெடித்ததில் 8 பேர் பலி: 12 பேர் படுகாயம்
மகச்கலா: ரஷ்யாவில் திருமண நிகழ்ச்சிக்காக, உணவு விடுதியில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த பொழுது, எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 8 தொழிலாளர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். 12க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள டகஸ்தான் தலைநகர் மகச்கலாவில் உள்ள லைலி என்ற உணவு விடுதி உள்ளது. இங்கு ஒரு திருமண நிகழ்ச்சி விருந்துக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. இதற்கான சமையல் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எரிவாயு வரும் பைப்பிள் திடீரென தீப்பிடித்ததால் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அங்கு பணியில் இருந்த 8 சமையல் கலைஞர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் தொழிலாளர்கள் 12 பேர் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து எரிவாயு சப்ளை செய்யும் நிறுவனமும், போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். எரிவாயு செல்லும் பைப் 40 வருடங்களுக்கு முந்தையது என்றும், அது அரிக்கப்பட்டிருந்ததால், எரிவாயு கசிந்து இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது












Click it and Unblock the Notifications