காஸாவில் 24 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் நீட்டிப்பு - எகிப்து, பாலஸ்தீனம் தகவல்
Subscribe to Oneindia Tamil
கெய்ரோ: இஸ்ரேல், பாலஸ்தீன பிரதிநிதிகள் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி காஸா பகுதியில் மேலும் 24 மணி நேரத்திற்கு போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தும், பாலஸ்தீனமும் இணைந்து இதை அறிவித்துள்ளன. இந்த காலகட்டத்தில் நிரந்தர உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஐந்து நாள் போர் நிறுத்தம் அமலில் வந்தது. தற்போது அது முடிவடைந்ததால் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தங்களுக்குப் பயன் தராத எந்த ஒரு போர் நிறுத்தத்தையும் தாங்கள் ஏற்கப் போவதில்லை என்று ஹமாஸ் எச்சரித்துள்ளது. ஆனால் ஹமாஸ் அமைப்புக்கு எகிப்தும், பாலஸ்தீனமும் தற்போது நெருக்குதல் தர ஆரம்பித்துள்ளன.












Click it and Unblock the Notifications