ஆல்ப்ஸ் மலையில் துயரம்... விழுந்து நொறுங்கிய ஜெர்மன் விமானம்... 148 பேர் பலி
பாரீஸ்: ஸ்பெயினிலிருந்து 142 பயணிகள் மற்றும் 6 விமான நிறுவன ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த ஏ320 ஏர்பஸ் விமானம், பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 148 பேரும் உயிரிழந்தனர்.
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் இருந்து ஜெர்மனியின் டுஸ்ஸல்டார்ப் நகருக்கு இந்த விமானம் கிளம்பியது. பிரான்ஸ் நாட்டில் அது ஆல்ப்ஸ் மலைத் தொடரின் தென் பகுதியின் மீது பறந்து கொண்டிருந்தபோது, Alpes de Hautes Provence என்ற இடத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. நைஸ் நகருக்கு 100 மைல் தொலைவில் விமானம் விழுந்துள்ளது.

ஆல்ப்ஸ் மலையானது மொராக்கோ முதல் ஸ்லோவேனியா வரை பரந்து விரிந்துள்ள பெரிய மலைத் தொடராகும். இதில் பிரான்சிஸ் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடரில்தான் விமானம் விழுந்துள்ளது.
விபத்தில் சிக்கிய விமானம் பிரபலமான லூப்தான்ஸா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜெர்மன் விங்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 4யு 9525 என்ற விமானமாகும். இந்த விமான நிறுவனம் நம்ம ஊர் ஸ்பைஸ்ஜெட் போல குறைந்த கட்டண விமானமாகும்.
பிரெஞ்சு அதிபர் பிரான்காய்ஸ் ஹோலன்ட் விமான விபத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விபத்து குறித்து அவர் கூறுகையில், விபத்தில் சிக்கிய யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. விபத்து நடந்த இடத்தை அடைவதும் கடினமானது என்றார்.
அந்த விமானத்தில் 174 பேர் வரை பயணிக்க முடியும். இருப்பினும் விபத்தில் சிக்கிய விமானத்தில் 142 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்துள்ளனர்.
விமானம் பார்சிலோனாவிலிருந்து கிளம்பிய 80 நிமிடங்களில் ரேடாரின் கண்ணிலிருந்து தப்பியுள்ளது. அதன் பின்னர் அது என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் அது ஆல்ப்ஸ் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.

விபத்தில் சிக்கிய விமானத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த பயணிகள் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது.
பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் காஸ்னூவே சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். விபத்துக்குள்ளான விமானத்தின் சிதறல்கள் அருகில் உள்ள பார்சலோனெட் என்ற கிராமத்தில் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்கான காரணம் தெரியவி்ல்லை.
ஏற்கனவே சர்வதேச அளவில் நடைபெற்ற மூன்று பெரிய விமான விபத்துக்களின் வடுக்கள் கூட ஆறாத நிலையில் மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த விமான விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications