ஜெர்மனி விமானத்தை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கி பயணிகளை கொன்ற துணை விமானி
பாரீஸ்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அதன் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ் திட்டமிட்டே விபத்துக்குள்ளாக்கி அதில் இருந்த அனைவரையும் கொன்றுள்ளார்.
ஜெர்மன்விங்ஸ் விமானத்தை அதன் துணை விமானியான ஜெர்மனியைச் சேர்ந்த ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) வேண்டும் என்றே பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதை அவர் திட்டமிட்டு செய்து விமானத்தில் இருந்த 149 பேர் பலியாக காரணமாக இருந்துள்ளார்.
துணை விமானி தற்கொலை செய்ய விமானத்தை விபத்துக்குள்ளாக்கிவிட்டார்.

விமானம்
கேப்டன் கழிவறைக்காக விமானி அறையில் இருந்து வெளியே சென்ற நேரத்தில் லுபிட்ஸ் விமானத்தை கீழ் நோக்கி வேகமாக செலுத்தியுள்ளார்.

கம்ப்யூட்டர் சிஸ்டம்
விமானம் வழக்கத்திற்கு மாறாக அபாய வழியில் செல்வதை தடுக்கும் கம்ப்யூட்டர் சுவிட்சை லுபிட்ஸ் ஆப் செய்து விட்டு 36 ஆயிரம் அடியில் பறந்த விமானத்தை வேகமாக தரை நோக்கி செல்ல வைத்துள்ளார்.

நொறுங்கியது
அவ்வளவு உயரத்தில் இருந்து விமானம் வேகமாக தரை நோக்கி வந்து மலை மீது மோதியதில் அது ஆயிரம் துண்டுகளாக சிதறியது. லுபிட்ஸ் விமானத்தை ஆல்ப்ஸ் மலையில் தான் மோத வேண்டும் என திட்டமிடவில்லை. கேப்டன் அந்நேரம் விமானி அறையில் இருந்து வெளியே சென்றதால் லுபிட்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்கிவிட்டார்.

லுபிட்ஸ்
லுபிட்ஸ் பதின்வயதில் இருக்கையிலேயே விமானி உரிமம் வாங்கிவிட்டார். அவர் 2013ம் ஆண்டு ஜெர்மன்விங்ஸ் நிறுவனத்தை நடத்தும் லுப்தான்ஸாவில் சேர்ந்தார். அவர் 630 மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளவர்.

சில்க் ஏர் போயிங்
1997ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தோனேசியாவின் ஜகர்தா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற சில்க் ஏர் போயிங் 737 விமானம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 97 பேர் பலியாகினர். அது அமெரிக்கா தயாரித்த விமானம் என்பதால் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு மையம் விபத்து குறித்து விசாரணை நடத்தியது. விசாரணையில் விமானி ஒருவர் வேண்டும் என்றே விமானத்தை விபத்துக்குள்ளாகியது தெரிய வந்தது.

வித்தியாசம்
சில்க் ஏர் போயிங் மற்றும் எகிப்து விமானங்கள் திடீர் என்று படுவேகத்தில் ஆறு மற்றும் கடலில் பாய்ந்துள்ளன. ஆனால் ஜெர்மன்விங்ஸ் விமானம் 36 ஆயிரம் அடியில் இருந்து வேகத்தை குறைத்து மலை மீது மோத 10 நிமிடங்கள் ஆகியுள்ளது. இதன் மூலம் இதற்கு முழு காரணம் துணை விமானி தான் என்பது தெரிய வந்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications