அமெரிக்க பூங்காவில் 4 வயது சிறுவனை மீட்க கொரில்லா சுட்டுக்கொலை
நியூயார்க்: அமெரிக்காவின் சின்சினாட்டி மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் கொரில்லாவிடம் சிக்கிய 4 வயது சிறுவனை காப்பாற்றுவதற்காக கொரில்லா சுட்டுக் கொல்லப்பட்டது.
சின்சினாட்டி மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் நேற்று முன்தினம் 4 வயது சிறுவன் அங்கிருந்த கொரில்லா பகுதியில் விழுந்துவிட்டார். அங்கிருந்த கொரில்லா அந்த சிறுவனை பிடித்துக் கொண்டது. இதனால் அச்சமடைந்த பூங்கா அதிகாரிகள், சிறுவனை காப்பாற்றும் நோக்கில் அடுத்த 10 நிமிடங்களில் 17 வயதான அந்த ஆண் கொரில்லாவை சுட்டுக் கொன்றுவிட்டனர்.
இந்த அரியவகை கொரில்லாவை கொன்றது மிகவும் துயரத்திற்குரிய செயல். சிறுவனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட காரணத்தினால், கொரில்லா கொல்லப்பட்டது. கொரில்லாவை சுட வேண்டும் என எடுக்கப்டட முடிவு கடினமானது என்றபோதிலும், அது சரியான முடிவு தான் என சின்சினாட்டி பூங்காவின் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவனை ஒன்றுமே செய்யாத போதிலும் கொரில்லா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது. கொரில்லாவிற்கு மயக்க மருந்து செலுத்தி சிறுவனை மீட்டுருக்கலாம் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications