யூரோ வலய திட்டத்திலிருந்து வெளியேற்றம்: கடன் பிரச்சனையை வெற்றிகரமாக சமாளித்த கிரீஸ்
நாட்டில் ஏற்பட்ட கடன் பிரச்சனை மற்றும் அதன் தாக்கத்தை சமாளிக்க வடிவமைக்கப்பட்ட யூரோ வலய திட்டத்தில், மூன்றாண்டு காலத்தை கிரீஸ்வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் முதல்முறையாக நிதி சந்தைகளில் இருந்து கடனாக நிதியை பெற கிரீஸுக்கு தடை ஏதும் தற்போது இல்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில் கிரீஸுக்கு அதன் நிதி பிரச்சனையை சமாளிக்க, ஐரோப்பிய நிதி ஸ்திரத்தன்மை அமைப்பு 61.9 பில்லியன் யூரோ நிதியை அளித்தது குறிப்பிடத்தக்கது.
கிரீஸ் நாட்டின் சரிவடைந்த பொருளாதாரத்தை புனரமைக்கவும், வங்கிகளின் மூலதனத்தை மறு சீரமைக்கவும் அந்நாட்டு அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்த திட்டம் மிகவும் உறுதுணையாக இருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியோடு, கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் கிரீஸுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 260 பில்லியன் யூரோவுக்கும் அதிகம்.
இதுவே உலக அளவில் ஒரு நாட்டுக்கு அதன் கடன் மற்றும் நிதி பிரச்சனையை சமாளிக்க வழங்கப்பட்ட அதிகபட்ச நீதியாகும்.
கிரீஸில் மூடப்பட்ட வங்கிகள்
கடந்த 2014-15 காலகட்டத்தில் கிரேக்க நாட்டில் வங்கிகள் நிதி பற்றாக்குறையால் பல நாட்களுக்கு மூடப்பட்டது.
அந்த காலகட்டத்தில் கிரீஸின் அவசர கால நிதியை நீட்டிக்க முடியாது என்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவையடுத்து, அந்நாட்டு வங்கிகள் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது ஏடிஎம் எந்திரங்களிலிருந்து பணத்தை எடுப்பவர்கள், ஒரு நாளைக்கு 60 யூரோக்களுக்கு மேல் எடுக்க முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த அறிவிப்புகளின் காரணமாக, ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன.
சர்வதேச நாணய நிதியம் உள்பட பல அமைப்புகளிடமிருந்து கடன் பெற்றிருக்கும் கிரேக்கம், அந்தக் கடனைத் திரும்பச் செலுத்துவதில் சிக்கலை சந்தித்தது.
ஏதென்ஸ் நகரில் எடிஎம் எந்திர மையங்களுக்கு முன்பு பெரும் எண்ணிக்கையில் மக்கள் குவிந்த செய்திகள் மற்றும் மக்களிடம் தென்பட்ட கவலை மற்றும் கோபம் ஆகியவை கிரீஸில் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை மற்றும் ஸ்திரமின்மையை வெளிக்காட்டுவதாக அமைந்தது.
நாட்டில் ஏற்பட்ட நிதி மற்றும் கடன் மற்றும் பிரச்சனையை சமாளிக்க மக்களின் ஆதரவை பெறாத பல சிக்கன நடவடிக்கைகளை கிரீஸ் அரசு எடுத்தது.
இந்த நடவடிக்கைகள் அந்நாடு பெற்ற கடன்கள் தொடர்பான நிபந்தனைகளில் உள்ளடங்கும்.
இந்நிலையில், அண்மைய ஆண்டுகளில் கிரீஸ் நாட்டின் பொருளாதாரம் மெதுவாக மேம்பட்டது. தற்போது யூரோ வலய திட்டத்தில் இருந்து அந்நாடு வெளியேறியது ஆக்கபூர்வமான ஒன்றாக கருதப்படுகிறது.
பிற செய்திகள்:
- கேரள வெள்ளம்: மழை குறைந்தது, மீட்பு பணிகள் தீவிரம்
- குரேஷியா: கடலில் 10 மணி நேரம் போராடிய பெண் மீட்பு - நம்பிக்கை பகிர்வு
- ஆசிய விளையாட்டு: முதல் தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியா
- குழந்தை பெற்றெடுக்க சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசிலாந்து அமைச்சர்
- தென்கொரியா: காதுகேளாதவர்களின் வாடகை கார் சேவை - எப்படி சாத்தியமானது?
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி















Click it and Unblock the Notifications