"நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்!" - இப்படியும் ஒரு நூதன மோசடி
நூதன மோசடியில் ஈடுப்பட்டதாக கினியா போலீஸ் ஒரு ஹீலரை கைது செய்துள்ளது.
அதாவது, நா ஃபாண்டா காமாரா என்ற அந்த ஹீலர் பல பெண்களிடம் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்' என்று சொல்லி நம்பவைத்து ஏமாற்றி இருக்கிறார்.
வயிறை வீங்க வைக்க கூடிய இலை, மற்றும் மூலிகைகளை கொடுத்து, பெண்களின் வயிறை வீங்க வைத்து, அவர்கள் கர்ப்பமாக இருப்பதாக நம்பவைத்திருக்கிறார் காமாரா.
இதற்காக, அவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் 33 டாலர்கள் வரை கட்டணம் செலுத்தி இருக்கிறார்கள். அந்ந நாட்டின் சராசரி மாத வருமானமே 48 டாலர்கள்தான்.
காமாரா ஒவ்வொரு மாதமும் பல்லாயிரக் கணக்கான டாலர்களை இது போல ஏமாற்றி இருக்கலாம் என்று போலீஸார் நம்புகிறார்கள்.
காவல் நிலையம் முற்றுகை
காமாரா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ஏறத்தாழ 200 பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
பாதிக்கப்பட்ட ஒரு பெண் சொல்கிறார், "சரியாக ஓராண்டுக்கு முன் அவரிடம் சிகிச்சை எடுக்க தொடங்கினேன். அவர் ஏதேதோ இலைகளையும், மூலிகைகளையும் கொடுத்தார். முதலில் எனக்கு வாந்தி வந்தது. வாந்தி வருவது நல்லது என்று அவர் கூறினார். அந்த மூலிகைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள தொடங்கியதும், என் வயிறு வீங்க ஆரம்பித்தது."
மேலும் அவர், "சில காலத்திற்கு பின் மீண்டும் அவரிடம் சென்றேன், என் வயிறை தொட்டுப் பார்த்த காமாரா நான் கர்ப்பம் அடைந்து இருப்பதாக கூறினார். மருத்துவரிடம் போக தேவையில்லை என்றும் கூறினார்." என்கிறார்.
கார்ப்பம் அடைந்து இருப்பதாக காமாரா சொல்லும் நபர்கள், அவருக்கு கோழியும், துணியும் எடுத்து தர வேண்டும்.
கடவுளின் கையில்
நான் எந்த குற்றமும் செய்யவில்லை என்கிறார் காமாரா.
"நான் குழந்தை இல்லாதவர்களின் கனவை நனைவாக்க உதவி செய்தேன். மற்றவை இறைவன் கையில்தான் உள்ளது." என்கிறார்.
பதினேழு வயதிலிருந்து 45 வயது வரை உடைய பெண்கள் காமாராவால் ஏமாற்றப்பட்டு இருக்கலாம்.
உலக சுகாதார நிறுவனத்தின், 2006 ஆம் ஆண்டு கணக்குப்படி, 80 சதவிகித ஆஃப்ரிக்கர்கள் மரபு சிகிச்சை முறையைதான் பின்பற்றி வருகிறார்கள்.
பிற செய்திகள்
- போலீஸ் சுட்டது 338 ரவுண்டு... ஆனால் வீரப்பனை தாக்கியது 2 தோட்டாக்களே!
- கிரிக்கெட்: வெளிநாட்டு மண்ணில் மீண்டும் தொடரை இழந்தது இந்தியா
- ஏர் இந்தியா: உடைந்த கழிவறை, ஓடும் எலிகள் மற்றும் கனிவான கவனிப்பின் கதைகள்
- ஹைதராபாத்தின் கடைசி நிஜாம்: வரலாறு சொல்லும் சுவாரஸ்ய தகவல்கள்
- ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் சந்தீப்பீர்களா ? ரஜினிகாந்த் பதில்
- ஜல்லிக்கட்டை பார்க்க வந்த அப்பாவிகள் பலியானதற்கு யார் பொறுப்பு?
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications