துப்பாக்கி சத்தம்.. மின்சார ஒயரில் நெருப்பு.. 85 பேரை பலிகொண்ட ஏமன் கோரச் சம்பவத்திற்கு பின்னணி!
சனா: ஏமன் நாட்டில் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 300க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதும், கூட்டத்தின் ஒருபகுதியில் மின்சார ஒயர் ஷாக் அடித்ததுமே உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இஸ்லாமிய நாடான ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியது. மன்சூர் ஹைதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அலி அப்துல்லா சாலே அதிபராக இருந்து வருகிறார். 8 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் தொடர்ந்து வருகிறது.

உள்நாட்டுப் போரினால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் ஐ.நா அமைப்புகள் அங்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றன. ஏமன் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள நிலையில் இருக்கின்றனர்.
இது ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் சனாவில் தனியார் சார்பில் உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளிக்கூடம் ஒன்றில் இந்த நிகழ்ச்சியின்போது உதவிப்பொருட்களைப் பெற ஒரே நேரத்தில் ஏராளமானோர் கூடினர். மக்கள் ஒருவொருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு உதவிகளைப் பெற முயன்றதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். 322 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தோரில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த காவலர்கள் சரிவர திட்டமிடாததால் இந்த விபரீதம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கிளர்ச்சியாளர் குழுவைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டது மக்களிடையே மேலும் பதற்றத்தை அதிகரித்து நெரிசலுக்கு காரணமாகியுள்ளது. மக்கள் அஞ்சி ஓடியதில் மிதிபட்டு பலர் மாண்டுள்ளனர்.
மேலும், கூட்டத்தின் ஒரு பகுதியில் மின்சார ஒயரில் ஷாக் அடித்து அதில் தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலால் அச்சம் பரவி மக்கள் சிதறி ஓடத் தொடங்கியதும் இந்த விபரீத சம்பவத்திற்குக் காரணம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications