Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛திமிறி எழும் ஹமாஸ்’’.. இஸ்ரேல் தலைநகர் மீது மீண்டும் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல்! அலறிய சைரன்கள்

Subscribe to Oneindia Tamil

காசா: காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகரான டெல்அலிவ் மீது மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை ஹமாஸ் அமைப்பு நடத்தி உள்ளது. இதனால் மீண்டும் இருதரப்பு இடையே மோதல் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் அண்டை நாடுகளாக உள்ளன. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஹமாஸ் அமைப்பு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் தான் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே காலம்காலமாக மோதல் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக அமைத்துள்ளது.

இதற்கிடையே தான் கடந்த அக்டோபர் மாதம் 7 ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அதிரடி தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான ஏவுகனைகளை ஏவினர். மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்கினர்.

hamas-launched-big-missile-attack-on-israel-capital-tel-aviv-after-long-gap

இதில் 1,000க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் 200க்கும் அதிகமானவர்கள பணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போரை அறிவித்தது. காசாவின் மீது இஸ்ரேல் ராணுவ விமானம், ஹெலிகாப்டர்கள் குண்டு மழை பொழிந்தன. இதில் ஹமாஸ் தீவிரவாதிகள், அப்பாவி மக்கள் பலியாகினர்.

கடந்த அக்டோபரில் தொடங்கிய போர் நடவடிக்கை இன்னும் முடியவில்லை. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது வரை 35 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகி உள்ள நிலையில் காசாவை சேர்ந்த மக்கள் பிற நாடுகளில் அகதிகளாக செல்கின்றனர். மேலும் காசா மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் வசிக்கும் பல லட்சம் மக்கள் பசி, பட்டினியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த 8 மாதங்களாக போர் நடந்து வரும் நிலையில் ஏறக்குறைய காசா நகர் மொத்தமாக உருக்குலைந்துவிட்டது. இதற்கிடையே தான் காசாவின் செயல்பாடு முழுவதுமாக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. அதாவது பல மாதங்களுக்கு பிறகு ஹமாஸ் சார்பில் இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மீது மிகப் பெரிய ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் அமைப்பின் அல்- கஸ்ஸாம் ஆயுதப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சேதம், உயிர் பலி பற்றிய எந்த விபரமும் உடனடியாக தெரியவில்லை.

இதுதொடர்பாக ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் படைப்பிரிவான அல்-கஸ்ஸாம் ஞாயிற்றுக்கிழமை டெலிகிராமில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில், "பொதுமக்களுக்கு எதிரான சியோனிசப் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் தலைநகர் டெல்அலிவ் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணைகள் காசாவில் இருந்து ஏவப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக காசாவின் ஏவுகணை தாக்குதலை மோப்பம் பிடித்த இஸ்ரேலிய ராணுவம் டெல் அவிவ் உள்ளிட்ட மத்திய நகரங்களில் ஏவுகணை தாக்குதல் தொடர்பான அச்சுறுத்தலை மக்களுக்கு உணர்த்தும் வகையில் எச்சரிக்கை சைரன்களை ஒலிக்கவிட்டன. கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேலில் ஏவுகணை தாக்குதலுக்கான சைரன்கள் ஒலிக்காத நிலையில் நேற்று திடீரென்று கேட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால் மீண்டும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+