தீவிரவாதிகள் இந்த வழியாக வரலாமா?.. மும்பையில் படகு சவாரி செய்து உளவு பார்த்த ஹெட்லி
நியூயார்க்: நான் மும்பையில் 4 முறை படகு சவாரி செய்து தீவிரவாதிகள் கடல் வழியாக எங்கு வந்து இறங்குவது என்று உளவு பார்த்துள்ளேன் என லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வழக்கு ஒன்றில் கைதாகி 35 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி 26/11 மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடையவர்.
அவர் அமெரிக்க சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பை நீதிமன்றம் முன்பு வாக்களித்து வருகிறார். இன்று அவர் கூறுகையில்,

மும்பை
மும்பையில் தாக்குதல் நடத்திய 10 தீவிரவாதிகளும் கராச்சியில் அமைக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு அறையில் இருந்த சஜித் மிர் மற்றும் அபு கபாவுடன் தொடர்பில் இருந்தனர். தீவிரவாதிகளை வழிநடத்தவே அந்த கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டது.

கடற்படை
லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கு கடற்படை பிரிவும் உண்டு. அதற்கு முகமது யாகூப் என்பவர் தலைவராக உள்ளார். அவரை நான் கடந்த 2003ம் ஆண்டு சந்தித்தேன். லஷ்கர் இ தொய்பாவின் நிதிக் குழு லாகூரைச் சேர்ந்த தொழில் அதிபர் அஷ்ரப் தலைமையில் செயல்படுகிறது.

காஷ்மிரி
இலியாஸ் காஷ்மிரி அல் கொய்தா அமைப்பில் இருந்தவர். சஜித் மிர்ருக்கு அபு அனஸ் என்ற உதவியாளர் இருந்தார்.

படகுகள்
நான் மும்பையில் 4 முறை படகு சவாரி செய்து தீவிரவாதிகள் கடல் வழியாக எங்கு வந்து இறங்குவது என்று உளவு பார்த்துள்ளேன்.












Click it and Unblock the Notifications