நேபாளத்தில் கொட்டி தீர்க்கும் அதீத மழை.. பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 65 பேர் பலி
Recommended Video
காத்மாண்டு: நேபாளத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மாயமானதாக கூறப்படும் 30 பேரை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பருவமழை தொடங்கியது. ஆனால் சராசரியாக மழை பெய்யாமல் குறைந்த நாட்களில் மிக அதிக அளவு மழைகொட்டி வருகிறது. இதனால் அந்நாட்டில் தாழ்வான பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை முதல் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள இமயமலை பகுதியின் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாக நேபாள நாட்டின் கிழக்குப் பகுதியிலும், அதன் தெற்கு சமவெளிகளிலும் கடுமையான மழை பெய்து வருகிறது.
பலத்த மழை காரணமாக நேபாளத்தின் தாழ்வான பகுதிகளை பெரு வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. மின்சாரம் விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. பல முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கிழக்கு நேபாளத்தில் பாயும் கோசி நதியில், அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
2 மாதங்களில் பெய்ய வேண்டிய மழையானது தற்போது ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு கொட்டி தீர்க்கிறது. மேலும் இந்த அதீத மழை மேலும் சில நாட்கள் தொடர வாய்ப்பு இருப்பதால் மக்கள் இன்னும் கவனமுடன் இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களை காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு சென்று மீட்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் இருந்து இதுவரை 1,146 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் நேபாள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications