சீனாவில் சூறைக்காற்றுடன் கொட்டித் தீர்க்கும் கனமழை.. பெருவெள்ளத்தில் சிக்கி 61 பேர் பலி
குவாங்டாங்: சீனாவில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக செஜ்ஜியாங், ஃப்யூஜியாங் உள்ளிட்ட ஏராளமான மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை வெள்ளத்தில் சிக்கி, 61 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 30-க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனவும், 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து நிர்கதியாக தவித்து நிற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கடந்த ஒரு வார காலமாக, சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால்
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏராளமான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. திரும்பும் திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. சுமார் 7 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஃப்யூஜியாங் மாகாணத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. குவாங்டங் மாகாணத்தில், வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் சிக்கி தவித்த ஆயிரக்கணக்கானாரை மீட்டுள்ள மீட்பு குழுவினர் அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர்.
இதனிடையே சீனாவின் அவசரநிலை மேலாண்மை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், கனமழை வெள்ளத்தில் சுமார் 9,300 வீடுகள் இடிந்து விழுந்துவிட்டதாக கூறியுள்ளது. மேலும், 3.71 மில்லியன் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் சிக்கி முற்றிலும் சேதமடைந்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள நேரடி பொருளாதார இழப்புகள், 13.35 பில்லியன் யுவான் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
சீனாவில் வழக்கமாக கோடை காலத்தின் போது வடக்கு மாகாணங்கள் வறட்சியாலும் மற்றும் தெற்கு மாகாணங்கள் வெள்ளத்தாலும் பாதிக்கப்படுகின்றன. தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வெள்ளம் கரைபுரண்டோடும் சூழலில், நடப்பாண்டு வடக்கு மாகாணங்கள் குறைந்த அளவிலான மழையையே பெற வாய்ப்பு உள்ளது.
இதனால் சீனாவின் வடக்கு மாகாணங்கள் கூடிய விரைவில் பெரும் வறட்சியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications