காபூலில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 5 நேட்டோ வீரர்கள் பலி

Subscribe to Oneindia Tamil

காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூலில் நேட்டோ ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்கிய போது விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆண்டு இறுதியில் பெரும்பாலான நேட்டோ படை வெளியேறிவிட்டது. இருந்தாலும்கூட சுமார் 12,000 வீரர்கள் கொண்ட படை ஆப்கனில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதில் 10,000 பேர் அமெரிக்க வீரர்கள். ஆப்கன் பாதுகாப்புப் படையினருக்கு சிறப்புப் பயிற்சி அளித்தல், சர்வதேச அமைப்புகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு அளித்தல் உள்ளிட்ட குறிப்பிட்ட செயல்பாடுகளில் மட்டும் நேட்டோ படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களைக் குறி வைத்து தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து நேற்று தலைநகர் காபூலில் உள்ள நேட்டோ தலைமை அலுவலகத்தில் ஹெலிகாப்டர் ஒன்று தரை இறங்கிய போது எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்கள் 2 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இதுக்கு முன்னதாக இங்கிலாந்து ராணுவ வாகனங்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பேர் காயமடைந்தனர். எனினும், உயிர் சேதம் எதுவும் இல்லை. மேலும் குண்டூஷ் நகரம் மீது குண்டு வீச்சு நடத்தியதாலும், மருத்துவமனையில் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்கள் கொல்லப்படுவதற்காகவும் இந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+