பரபரப்பு.. பாகிஸ்தானில் இந்து கோவிலை அடித்து நொறுக்கி சராமாரி தாக்குதல்.. பகீரை கிளப்பும் வீடியோ
இந்து கோவில் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
கராச்சி: பாகிஸ்தானில் இந்து கோவில் மீது குண்டர்கள் சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை தந்து வருகிறது.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள் சீக்கியர்கள், அகமதியாக்கள், ஷியாக்கள் சிறுபான்மையினர்களாக உள்ளனர்... அங்கிருக்கும் முஸ்லிம் மக்கள் தொகையில் 2 சதவீத பேர் மட்டுமே இந்துக்கள் ஆவர்..
இங்கு சிறுபான்மையினரை பலவந்தப்படுத்தி இஸ்லாமியர்களாக மாற்றப்படுவதும் அதிகளவில் அரங்கேறி வருகிறது... மேலும் பெண்களை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி திருமணம் செய்வதும் அடிக்கடி நடந்து வரும் சம்பவமாகும்.

மதங்கள்
பல முறை இந்து பெண்கள் உட்பட பிற மதத்தை சேர்ந்த சிறுபான்மையினர்கள் இந்த பகுதியில் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ளனர்... இதுபோன்ற சூழலில் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள் .. இந்துக்களின் கோயில்கள் மீது அடிக்கடி வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதும் இதில் ஒன்றாகும்.. அந்த வகையில், இப்போதும் ஒரு சம்பவம் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் ரஹிம் யார்கான் மாவட்டத்தில் நடந்துள்ளது.. அங்குள்ள ஒரு இந்து கோயிலை தாக்கி உள்ளனர்.

கோவில்
2 தினங்களுக்கு முன்பு, 8 வயது சிறுவன் மதப்பள்ளியை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.. இதனாலேயே இந்து கோயிலை தாக்கியதாக காரணம் சொல்லப்படுகிறது.. அதாவது, மதராசா லைப்ரரியில் மத புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, போர்வையின் மீது அந்த சிறுவன் வேண்டுமென்றே சிறுநீர் கழித்துவிட்டானாம்... அந்த சிறுவன் மீது நடவடிக்கை தேவை என்று சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்
இதையடுத்து போலீசாரும், அந்த சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தினர்.. பிறகு சிறுவனுக்கு ஜாமீனும் அளித்தனர்.. இதனால் போராட்டக்காரர்கள் மேலும் ஆத்திரமடைந்தனர்.. ஜாமீன் வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சிலர், இந்து கோவில் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர்.. இந்த தகவல் கிடைத்ததுமே, போலீசார் விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் இந்து கோவிலை குண்டர்கள் அடித்து நொறுக்கிவிட்டனர்..

ஜாமீன்
ஏனென்றால், பாகிஸ்தான் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் செயலில் யார் ஈடுபட்டாலும், அவர்களுக்கு மரண தண்டனை தருவதுதான் வழக்கமாம்.. அப்படி ஒரு குற்றத்தை அந்த சிறுவன் செய்தும், தகுந்த நடவடிக்கை எடுக்காமல் ஜாமீன் தந்ததாலேயே சிலர், இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.. இதனால் ரஹிம்யார்கான் மாவட்டத்தில் பதட்டம் சூழ்ந்துள்ளது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications