தீபாவளிக்கு விடுமுறை அளிக்க பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் கோரிக்கை!
இஸ்லாமபாத்: தீபாவளிக்கு பொது விடுமுறை மற்றும் சிறப்பு நிதி உதவி உள்ளிட்டவைகளை அளிக்கவேண்டும் என்று பிரதமர் நவாஷ் ஷெரீபுக்கு பாகிஸ்தானில் உள்ள இந்து மதத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தானின் இந்து கவுன்சில் பட்ரோனியன் கட்சி தலைவரும் ஆளும் கட்சி எம்.எல்.ஏவுமான ரமேஷ் குமார் வான்கவ்னி கூறும்போது, ''தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அளிப்பது சிறுபான்மையின மக்களின் கையறு நிலையை குறைக்க உதவும்.
தேச பக்தி நிறைந்த பாகிஸ்தானியர்களான எங்களின் ஆண்டு விழாவுக்கு பொது விடுமுறை அளிக்க நமது அரசியலைமைப்பில் உரிமை உள்ளது.
இந்த விவகாரத்தை நான் தேசிய சட்டமன்றத்தில் எழுப்புவேன். பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தினரின் பிரச்னையை தீர்க்க எந்த அரசியல் கட்சியும் ஆர்வம் காட்டவில்லை.
இந்தியா, இலங்கை, மியான்மர் உள்ளிட்ட 10 நாடுகளில் தீபாவளிக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் அன்றைய தினம் அலுவலகம் செல்லவில்லை என்றால் வரவில்லை என்று அலுவலகத்தில் குறிக்கப்படுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications