அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் வெள்ளம்: இந்திய பெண் என்ஜினீயர் உள்பட 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாணத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் இந்திய பெண் என்ஜினீயர் உள்பட 6 பேர் பலி பலியானார்கள். இதன் காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரான ஹூஸ்டனில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், அங்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டது. 1 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. விமான நிலையங்களும் தண்ணீரில் மிதக்கின்றன.

historic flooding claims 6 lives in Houston

இந்த வெள்ளத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர், இந்தியப்பெண்ணான சுனிதா சிங் (வயது 47) ஆவார். இவர் அங்கு பெக்டெக் எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனத்தில் மூத்த மின்சார என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது, காரோடு அடித்து செல்லப்பட்டார். இதில் அவர் காரிலேயே பிணமானார். சுனிதாவுக்கு கணவரும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் வரலாறு காணாத அளவில் பெய்துள்ள மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் டெக்சாஸ் கவர்னர் கிரேக் அப்போட் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+