ரோமப் பேரரசு வரலாற்று காலம்: இங்கிலாந்தில் கிடைத்த இரும்புக் கால எலும்புக் கூடுகள்
இங்கிலாந்தில் லிங்கன்ஷயரில் நடந்த அகழ்வாய்வில் இரண்டு இரும்புக் கால எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த எலும்புக் கூடுகள், நேவன்பை என்னும் இடத்துக்கருகில் தனித் தனி அகழ்வாய்வுப் பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்டன. ஒரு தண்ணீர் குழாய்த் திட்டத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளின் போது இந்த எலும்புக் கூடுகள் கிடைத்தன.
இதனோடு சிறு கட்டடங்கள் மற்றும் பானைகளின் உடைந்த பாகங்களும் கிடைத்திருக்கின்றன.
இந்த கண்டுபிடிப்புகள் இந்த பகுதியின் கடந்த காலத்தைக் குறித்து, அகழ்வாய்வாளர்கள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள உதவும் என ஆங்லியன் வாட்டர் நிறுவனத்தின் தொல்பொருட்கள் மதிப்பீட்டாளரான ஜோ எவரிட் கூறினார்.
- 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால 'ஃபாஸ்ட் ஃபுட்' கடை கண்டுபிடிப்பு
- ஆஸ்டெக் பேரரசின் பழங்கால மண்டை ஓட்டு கோபுரம் அகழாய்வில் வெளிவந்தது
இரும்புக் காலம் என்பது கிறிஸ்து பிறப்பதற்கு முன் 800 (கி.மு) முதல் ரோம் நகரத்தின் படையெடுப்பு நடந்த 43 கி.பி காலத்தையும் உள்ளடக்கியதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
"நேவன்பை பகுதியில் இரும்புக் கால சமூகங்கள் வாழ்ந்தனர் என்பதை அறிவோம். அதோடு நன்கு வரையறுக்கப்பட்ட ரோமானியர்களின் வரலாறும் இங்கு இருக்கிறது. இது போன்ற கண்டுபிடிப்புகள், நம் முந்தைய வரலாற்றைக் குறித்து நிறைய விஷயங்களைக் கூறும். இரும்புக் காலச் சமூகத்தினர் ஒவ்வொரு நாளையும் எப்படி வாழ்ந்தார்கள் என்பதைக் கூறும்" என்றார் எவரிட்.
இந்த எச்சங்களில் நாட்டிங்ஹாம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் நிபுணர்கள் தங்களின் பகுப்பாய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏங்லின் வாட்டர் நிறுவனத்தின் தண்ணீர் குழாய்த் திட்டத்தின் முதல் பகுதி லிங்கன் & க்ராந்தம் நகரங்களுக்கு இடையில் வரும் வசந்த காலத்தில் தொடங்க இருக்கிறது.
- 20 லட்சம் ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு கண்டுபிடிப்பு - மனித பரிணாம வளர்ச்சி ஆராய்ச்சியில் மைல்கல்
- 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆண்டான் - அடிமை உடல்கள் கண்டெடுப்பு
இதற்கு முன்பு இந்தப் பகுதிகளைத் தோண்டிய போது, பல ரோமப் பேரரசு காலத்தின் நாணயங்கள் கிடைத்தன.
அந்த காலகட்டங்களிலேயே, இந்த பகுதிகளில் மெக்டொனால்ட்ஸ் போன்ற துரித உணவகங்கள் இருந்தது என்கிற கருத்துக்கு வலுசேர்க்கும் விதத்தில் இந்த நாணயங்கள் இருக்கின்றன என அப்போது நிபுணர்கள் கூறினார்கள்.
இந்த பகுதிகளில் ரோமப் பேரரசின் சில கட்டட எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.
பிற செய்திகள்:
- விவசாயிகளின் குடியரசு தின பேரணி: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
- Ind Vs Aus 4-வது டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா இந்திய அணி?
- திமுகவில் சேர்ந்த 4 ரஜினி மன்ற மாவட்ட செயலாளர்கள்: அந்த கட்சிக்கு பலமா?
- டிஆர்பி முறைகேடு: அதிர்வலைகளை ஏற்படுத்திய வாட்சாப் உரையாடல் - பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!














Click it and Unblock the Notifications