பாக். ஆளுநர் வீட்டிற்கு மும்பையில் இருந்து போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
கராச்சி: மும்பையில் இருந்து வந்த போலி போன் அழைப்பால் பாகிஸ்தானின் சிந்த் மாகாண ஆளுநரின் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள சிந்த் மாகாண ஆளுநராக இருப்பவர் இஷரத்துல் இபாத். சனிக்கிழமை அதிகாலை ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. போனை எடுத்துப் பேசியபோது மறுமுனையில் பேசியவர் இபாதின் கராச்சி வீடு மற்றும் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இபாதின் வீடு மற்றும் அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பிறகே போன் மூலம் வந்த மிரட்டல் பொய்யானது என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து உளவுத் துறை நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த அழைப்பு மும்பையில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அழைப்பு போலியாக இருந்தாலும் இபாதின் வீடு மற்றும் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து வந்த போன் அழைப்பால் சிந்த் மாகாண ஆளுநரின் வீடு மற்றும் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications