ஆப்கனில் கௌரவக்கொலை: காதல் தம்பதியினரின் கழுத்தை துண்டித்த உறவினர்கள்
Subscribe to Oneindia Tamil
கந்தகார்: ஆப்கனில் காதலித்து திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்காக உறவினர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஆண் மற்றும் பெண்ணை கொடூரமாக தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
தெற்கு ஆப்கானிஸ்தானில் 20 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் தான் காதலித்த ஆணுடன் தனியே வசித்து வந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அப்பெண்ணின் உறவினர்கள் சுமார் 20 பேர் வீட்டின் கதவுகளை உடைத்து தம்பதியினரைத் தூக்கிச் சென்றுள்ளனர்.
பின்னர் அவர்களாது தலையை துண்டித்து கௌரவக் கொலை செய்துள்ளனர். சடலங்களை ஊருக்கு வெளியே தூக்கி வீசிச் சென்றுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சலடங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையின் பிண்ணனி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications