அமெரிக்காவில் ஏர் பலூன் விபத்து– பயணித்த 3 பேர் மாயம்
வெர்ஜினியா: அமெரிக்காவில் ஏர் பலூன் ஒன்று, அதிக வெப்பத்தால் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், அதில் பயணம் செய்த மூன்று பேரின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
வெர்ஜினியா காவல்துறை பிரதிநிதியான கொரினே கெல்லர், உள்ளூர் செய்தியாளர்களிடம் கூறிய செய்தியில் அதிகாரிகள் இந்த விபத்து பற்றி நேற்று மாலை தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார்.
அந்த பலூனில் ஓட்டுநருடன் இணைந்து மேலும் இருவர் இருந்ததாக கூறியுள்ளார்.பலூனின் கூடை தீப்பிடித்ததால் இந்த விபத்து நேரிட்டதாக பார்த்தவர்கள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால், எந்த விதமான சேதமடைந்த பாகங்களும் காவல்துறைக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி அதிகாரிகள் தெரிவிக்கையில், "இரவு முழுவதும் நாங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தோம்.ஆனால், கடுமையான புயல் அறிகுறிகளால் இன்னும் தேடுதல் நடவடிக்கை தொடர்கின்றது" என்று கூறியுள்ளனர்.