புயலென பாய்ந்து வந்த புல்லட்.. தடுத்து நிறுத்தி உயிரைக் காத்த பிரா
பெர்லின்: ஜெர்மனியில் 42 வயதுப் பெண்ணின் மார்பில் போய்ந்த துப்பாக்கித் தோட்டா அதிர்ஷ்டவசமாக உள்ளுக்குள் போகாமல் நின்று விட்டது. அவரைக் காத்தது அவர் அணிந்திருந்த பிராதான் என்பதுதான் ஆச்சரியமான செய்தியாகியிருக்கிறது ஜெர்மனியில்.
42 வயதான அந்தப் பெண் பெர்லினுக்கு அருகே உள்ள மெக்கன்பர்க் என்ற இடத்திற்கு விடுமுறைக்காக வந்திரு்நதார். அவரும், அவரது கணவரும் பைக்கில் ஹாயாக போய்க் கொண்டிருந்தனர். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கித் தோட்டா அப்பெண்ணின் மார்பைத் தாக்கியது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரது பிராவுடன் அந்த குண்டு நின்று விட்டது. உடலுக்குள் போகவில்லை. வேட்டைக்காரர் ஒருவரது துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வந்த தோட்டாவாகும் அது.

ஷாக் ஆகிட்டேன்...
இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், "நான் அப்படியே வலியில் சற்று நேரம் ஸ்தம்பித்து விட்டேன். உடனடியாக எனது மேல் கோட்டை கழற்றிப் பார்த்தபோது அந்தத் தோட்டா எனது பிராவின் வயர் பகுதியில் பட்டு நின்றிருந்ததைக் கண்டேன்.

கனமான வயர்...
பிராவின் வயர் பகுதி சற்று வளைந்து விட்டது. அது உறுதியாக இருந்ததால் தோட்டா உள்ளே பாயவில்லை" என்றார்.

உயிரைக் காப்பாற்றியது...
அவரிடம் விசாரணை நடத்திய போலீஸார் கூறுகையில், "உண்மையில் அவரது பிராதான் அப்பெண்ணின் உயிரைக் காத்துள்ளது. அது மட்டும் இல்லாவிட்டால் மிகப் பெரிய காயத்தை அவர் அடைந்திருப்பார்" என்றனர்.

வழக்கு...
சம்பந்தப்பட்ட வேட்டைக்காரர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஆன்ட்ரே பால்க் கூறியுள்ளார்.

சாட்சிக்காக...
அந்த பெயர் குறிப்பிடப்படாத பெண் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர். இன்னும் அந்த அதிர்ச்சிச் சம்பவத்திலிருந்து அவர் மீளவில்லையாம். சம்பவத்திற்குப் பின்னர் சாட்சியத்திற்காக அவரது பிராவை போலீஸார் கேட்டுப் பெற்றுள்ளனர். கோர்ட்டிலும் அது தாக்கல் செய்யப்படுமாம்.












Click it and Unblock the Notifications