அமெரிக்க இனக் கலவர போராட்ட செய்தி சேகரித்த 2 நிருபர்கள் அதிரடி கைது
பெர்குசன், அமெரிக்கா: அமெரிக்காவை உலுக்கி வரும் இனக் கலவரம் தொடர்பான போராட்டங்களை செய்தி சேகரித்த இரண்டு செய்தியாளர்களை அமெரிக்க போலீஸார் கைது செய்தனர்.
வாஷிங்டன் போஸ்ட் இதழின் வெஸ்லி லோரி, ஹப்பிங்டன் போஸ்ட் இதழின் ரியான் ரெய்லி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிசெளரி மாகாணத்தின் பெர்குசன் நகரில் நடந்து வந்த கருப்பர் இனத்தவரின் போராட்டங்களை செய்தியாக சேகரித்தபோது இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
ஆனால் விசாரணைக்குப் பின்னர் இரு செய்தியாளர்களும் விடுவிக்கப்பட்டு விட்டனர். இவர்களின் கைது அமெரிக்க ஊடகங்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைக்கேல் பிரவுன் என்ற 18 வயது கருப்பர் இன வாலிபரை, வெள்ளையர் இன அதிகாரி ஒருவர் சரமாரியாக சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து அமெரிக்காவில் இனக் கலவரம் வெடித்துள்ளது. கருப்பர் இனத்தவர் செயின்ட் லூயிஸ், பெர்குசன் ஆகிய நகரங்களில் போராட்டங்களில் குதித்துள்ளனர். கலவரத்தில் பல வர்த்தக நிறுவனங்கள் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. பதட்டம் நீடிக்கிறது.
இந்த நிலையில்தான் போராட்ட செய்தியை சேகரித்த இரு செய்தியாளர்களை போலீஸார் கைது செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
போலீஸார் தங்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும், தாக்கியதாகவும் செய்தியாளர் ரெய்லி கூறியுள்ளார். அவர் கூறுகையில் என்னைக் கைது செய்த அதிகாரி எனது பொருட்கள், கேமராவை ஒரு பையில் வேகமாகப் போட்டு திணித்தார். அவரிடம் உங்களது பெயர் என்ன என்று கேட்டபோது அவர் பதில் சொல்லவில்லை. மாறாக எனது கழுத்தில் விரலை வைத்து மிரட்டுவது போல பேசினார்.
போலீஸார் போலவே அவர்கள் செயல்படவில்லை. ராணுவத்தினர் போல நடந்து கொண்டனர். இது மிகவும் கொடுமையானது. மேலும், எங்களை ஒரு மெக்டொனால்ட்ஸ் கடைக்குள் கூட்டிச் சென்று அதிகாரிகள் தாக்கினர். எங்களது அடையாளத்தைக் காட்டிய பிறகே தாக்குதலை நிறுத்தினர். பின்னர் மன்னிப்பு கேட்டனர் என்றார்.
அடையாள அட்டையை போலீஸ் அதிகாரிகள் கேட்டபோது அதைக் கொடுக்கத் தவறியதால்தான் இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications