மலேரியா கொசுக்களை ஈர்க்கும் செயற்கை மனித வாசனை.. ஆப்பிரிக்காவில் ஆய்வு
நைரோபி: செயற்கையான மனித வாசனை மூலம் மலேரியாவைப் பரப்பும் கொசுக்களை ஈர்த்துப் பிடிப்பது குறித்த ஆய்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம். செயற்கையாக மனித வாசனையை வெளியிடும் சாதனம் கொண்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டதில் மலேரியாவை ஏற்படுத்தும் 70 சதவீத கொசுக்களை பிடிக்க அந்த சாதனம் உதவியதாம்.
மலேரியாவை ஒழிப்பதற்கு கொசுக்கள் குறித்து கென்யாவில் ஆராய்சி மேற்கொள்ளப்பட்டது. நெதர்லாந்து பல்கலைக்கழகமான வேஜினின்ஜென் மூலமாக 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில் கொசுக்களை ஈர்க்கும் வகையில் செயற்கையான மனித வாசனையை வெளியிடும் சாதனத்தைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மலேரியாவை ஏற்படுத்தும் 70 சதவீதம் கொசுக்களை பிடிக்க அந்த சாதனம் உதவியதாம்.

டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் போன்றவை ஒட்டுண்ணிகளால் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இந்த ஒட்டுண்ணிகள் கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது என்பதால், இந்த சாதனத்தை பயன்படுத்தி டெங்கு, ஜிகா போன்ற நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். மருந்துகளை பயன்படுத்துவதால் கொசுக்கள் அதற்கு ஏற்றவாறு எதிர்ப்பு சக்தியை பெறுகிறதாம். இந்த சாதனத்தை பயன்படுத்தும் பட்சத்தில், பூச்சிக் கொல்லிகளை கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த தேவையில்லை என்று அந்த ஆராய்ச்சியில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேரியாவை பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் தடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என ஆராய்ச்சி மேற்கொண்ட நெதர்லாந்து பல்கலைக்கழக மாணவர் தெரிவித்தார். இதற்காக அவர் கென்யாவில் உள்ள பூச்சிகள் குறித்த ஆராய்சி மையம், சுவிஸ் நாட்டின் கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டார்.
ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நிமிடமும் மலேரியாவால் ஒரு குழந்தை உயிரிழந்து வருகிறது. இதற்காக வருடத்திற்கு 100 கோடி டாலர் செலவிடப்படுகிறதாம். கொசுக்கள் மூலமாக பரவும் இந்த மலேரியாவை ஒழிக்க முடியாத நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் 438,000 பேர் மலேரியாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில், ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பகுதியில் 5-வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மலேரியால் ஏற்படும் 90 சதவீத உயிரிழப்புகளை 20 சதவீதமாக குறைக்க உலக சுகாதார அமைப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications