மலேரியா கொசுக்களை ஈர்க்கும் செயற்கை மனித வாசனை.. ஆப்பிரிக்காவில் ஆய்வு
நைரோபி: செயற்கையான மனித வாசனை மூலம் மலேரியாவைப் பரப்பும் கொசுக்களை ஈர்த்துப் பிடிப்பது குறித்த ஆய்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம். செயற்கையாக மனித வாசனையை வெளியிடும் சாதனம் கொண்டு ஆராய்ச்சி நடத்தப்பட்டதில் மலேரியாவை ஏற்படுத்தும் 70 சதவீத கொசுக்களை பிடிக்க அந்த சாதனம் உதவியதாம்.
மலேரியாவை ஒழிப்பதற்கு கொசுக்கள் குறித்து கென்யாவில் ஆராய்சி மேற்கொள்ளப்பட்டது. நெதர்லாந்து பல்கலைக்கழகமான வேஜினின்ஜென் மூலமாக 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சியில் கொசுக்களை ஈர்க்கும் வகையில் செயற்கையான மனித வாசனையை வெளியிடும் சாதனத்தைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மலேரியாவை ஏற்படுத்தும் 70 சதவீதம் கொசுக்களை பிடிக்க அந்த சாதனம் உதவியதாம்.

டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் போன்றவை ஒட்டுண்ணிகளால் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. இந்த ஒட்டுண்ணிகள் கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது என்பதால், இந்த சாதனத்தை பயன்படுத்தி டெங்கு, ஜிகா போன்ற நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். மருந்துகளை பயன்படுத்துவதால் கொசுக்கள் அதற்கு ஏற்றவாறு எதிர்ப்பு சக்தியை பெறுகிறதாம். இந்த சாதனத்தை பயன்படுத்தும் பட்சத்தில், பூச்சிக் கொல்லிகளை கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்த தேவையில்லை என்று அந்த ஆராய்ச்சியில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேரியாவை பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் தடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என ஆராய்ச்சி மேற்கொண்ட நெதர்லாந்து பல்கலைக்கழக மாணவர் தெரிவித்தார். இதற்காக அவர் கென்யாவில் உள்ள பூச்சிகள் குறித்த ஆராய்சி மையம், சுவிஸ் நாட்டின் கல்வி நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டார்.
ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு நிமிடமும் மலேரியாவால் ஒரு குழந்தை உயிரிழந்து வருகிறது. இதற்காக வருடத்திற்கு 100 கோடி டாலர் செலவிடப்படுகிறதாம். கொசுக்கள் மூலமாக பரவும் இந்த மலேரியாவை ஒழிக்க முடியாத நிலையில், கடந்த ஆண்டில் மட்டும் 438,000 பேர் மலேரியாவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில், ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பகுதியில் 5-வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகமாக உயிரிழந்துள்ளனர். தற்போது மலேரியால் ஏற்படும் 90 சதவீத உயிரிழப்புகளை 20 சதவீதமாக குறைக்க உலக சுகாதார அமைப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications