நான் நாளை இறந்துவிடுவேன்: லிங்க்ட்இன்னில் அறிவித்த தொழில் அதிபர்
லண்டன்: நான் திங்கட்கிழமை இறந்துவிட்டேன் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் நாளை தான் தற்கொலை செய்து கொள்ள உள்ளதை முன்கூட்டியே லிங்க்ட் இன் மூலம் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள சட்டன் பகுதியைச் சேர்ந்தவர் சைமன் பின்னர்(57). கேர்மார்க் என்ற நிறுவனத்தின் ஆபரேஷன்ஸ் டைரக்டராக இருந்த அவருக்கு குணப்படுத்த முடியாத நோய் இருப்பது கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு வந்துள்ள நோயால் அவரது நரம்பு மண்டலம் மற்றும் தசைகள் பாதிக்கப்படும்.
இதையடுத்து அவர் கேர்மார்க்கில் தனது பதவியை வேறு ஒருவருக்கு அளித்துவிட்டு முக்கியம் இல்லாத பதவியை தேர்வு செய்தார். தனது நோய்க்கு தீர்வு இல்லை என்பதை உணர்ந்த சைமன் சுவிட்சர்லாந்தில் குணப்படுத்த முடியாத நோயால் அவதிப்படுபவர்கள் தற்கொலை செய்ய உதவும் மருத்துவமனையில் சேர்கிறார்.
அவர் நாளை மருத்துவர்களின் உதவியுடன் தனது உயிரை மாய்த்துக் கொள்ள உள்ளார். இந்நிலையில் அவர் லிங்க்ட்இன்னில் கூறியிருப்பதாவது,
நான் சுவிட்சர்லாந்தில் அக்டோபர் 19ம் தேதி இறந்துவிட்டேன். எனது இறுதிச் சடங்குகள்நவம்பர் மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடந்தது. யாருக்கும் எனக்கு வந்த நோய் வரக்கூடாது. அதற்கு பதிலாக விபத்தில் இறந்துவிடலாம் என்று தெரிவித்துள்ளார்.
சைமன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவர் சுவிட்சர்லாந்திற்கு பதில் தனது நாட்டிலேயே மருத்துவர்கள் உதவியுடன் தற்கொலை செய்ய விரும்புகிறார். ஆனால் அதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications