Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் மொழிக்கு அச்சுறுத்தல் விடுப்பது என்பது இந்தியாவையே அச்சுறுத்துவதாகும்: அமெரிக்காவில் ராகுல்

Subscribe to Oneindia Tamil

கலிபோர்னியா: இந்தியாவில் அரசியல் சாசனம் என்பது அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது; தமிழ் மொழிக்கு அச்ச்சுறுத்தல் விடுப்பது என்பது இந்தியாவையே அச்சுறுத்துவதாகும் என அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக கூறினார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே ராகுல் காந்தி பேசியதாவது: இந்தியர்கள் புத்திசாலிகள் என அமெரிக்கா சொல்கிறது எனில் அதற்கு காரணம் நீங்கள்தான். இந்தியாவின் மரியாதையையும் கலாசாரத்தையும் சுமந்து நிற்கிறீர்கள். இந்திய அரசியல் சாசனம் என்பது மாநிலங்களின் கூட்டமைப்பைக் கொண்டது (Union of States). அனைத்து மொழிகள், கலாசாரம், வரலாறு இந்திய அரசியல் சாசனத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளன. ஆனால் பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.-ம் இந்திய அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றன.

I will never ever allow Tamil language to be threatened: Rahul in US

என்னைப் பொறுத்தவரையில் தமிழ் மொழி என்பது தமிழர்களுக்கு மிகவும் உயர்வானது; அது ஒரு மொழி மட்டும் அல்ல. அது தமிழர்களின் வரலாறு; கலாசாரம்; தமிழர்களின் வாழ்வியல் சார்ந்தது. ஒருபோதும் தமிழ் மொழியை அச்சுறுத்துவதை அனுமதிக்க முடியாது. தமிழ் மொழியை அச்சுறுத்துவது என்பது ஒட்டுமொத்த இந்தியா என்ற கட்டமைப்பையே அச்சுறுத்துவதாகவே நான் கருதுகிறேன். வங்க மொழி, பஞ்சாபி, கன்னட மொழி, இந்தி ஆகிய அனைத்தும் இந்தியாவில் தாக்குதலுக்குள்ளாகின்றன. இந்தியர்களாகிய நமது பலமே வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான். ஒருவரை ஒருவர் அங்கீகரித்து இணைந்து செயல்படுவதுதான் நமது பலம்.

நாங்கள் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினோம். இந்திய சமூகத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒரு எக்ஸ்ரே போன்ற்து ஜாதிவாரி கணக்கெடுப்பு. பல்வேறு சமூகங்கள், ஜாதிகளைச் சேர்ந்த மக்களின் விவரங்களை கணக்கெடுக்கக் கூடியது அது. இதன் மூலம் யார் யாருக்கு நலத் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பது வரையறை செய்யப்படுவது எளிதானதாக இருக்கும். ஆகையால்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் பாஜகவுக்கு அழுத்தம் தருகிறோம். ஆனால் பாஜகவோ இதனை ஏற்க மறுக்கிறது. இந்தியாவில் எதனையுமே புரிந்து கொள்ள மறுக்கிற- இந்தியாவில் தங்களுக்குதான் அத்தனையும் தெரியும் என்கிற கூட்டம்தான் அதிகாரத்தில் இருக்கிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+