Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயம் காட்டிட்டாங்க பரமா! ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய இஸ்ரேலின் முக்கிய புள்ளி.. ஹிஸ்புல்லா ஆடிய ஆட்டம்!

Subscribe to Oneindia Tamil

டெல்அவிவ்: லெபனான் மீது இஸ்ரேல் போரை அறிவித்துள்ள நிலையில், ஹிஸ்புல்லா இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது. ஹிஸ்புல்லா நேற்று நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் முக்கிய தலைவர் நூலிழையில் உயிர் தப்பியிருக்கிறார்.

மத்திய கிழக்கு இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டதே வரலாற்று பிழை என பல்வேறு, ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது, இஸ்ரேல் என்பது யூதர்களின் தேசமாகும். இரண்டாம் உலகப்போர் காலத்தில், ஜெர்மனின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் வந்த யூதர்களுக்கு மத்திய கிழக்கு அடைக்கலம் கொடுத்தது. உன்மையில் அடைக்கலம் கொடுக்க மத்திய கிழக்கு நாடுகளுக்கு விருப்பமில்லை, ஆனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் அரசியலால் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது.

idf israel

சுற்றி இஸ்லாமியர்கள் இருக்க.. இஸ்ரேல் மட்டும் யூத நாடாக பரிணமித்தது. பிரச்னை இதுவல்ல! தாங்களே மிகவும் உயர்ந்தவர்கள் என்கிற மனநிலையுடன் யூதர்கள் மேற்கொண்ட பல விஷயங்கள்தான் பஞ்சாயத்து வெடிக்க முடிக்கிய காரணம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த மனநிலையுடன் இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்க தொடங்கியது. இந்த நடவடிக்கைகளுக்கு துணையாக அமெரிக்கா நின்றது. விளைவு, ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன விடுதலை குழுக்கள் உருவாகின.

கடந்த ஆண்டு இந்த குழுக்கள் (ஹமாஸ்) இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்க, இஸ்ரேல் பதில் தாக்குதலை தொடங்கியது. இது போராக தற்போது நீடித்து வருகிறது. இந்த போர் இஸ்ரேல் vs பாலஸ்தீனம்(காசா/ஹமாஸ்) என்பதை தாண்டி, லெபனான் வரை நீடித்திருக்கிறது. இதற்கு முழு காரணம் இஸ்ரேல்தான்.

லெபானான் என்பது ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாக்களின் ஆதிக்கத்தில் இருக்கும் நாடாகும். எனவே ஹிஸ்புல்லா பதில் தாக்குதலில் இறங்கியது. இதனால் மத்திய கிழக்கு முழுவதும் தற்போது பதற்றமான சூழலில் இருக்கிறது. நேற்றிரவு, இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா திடீரென ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் கோலானி பகுதியில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. இதில் 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது. ட்ரோன் தாக்குதலை தடுக்க இஸ்ரேல் பல அதிநவீன தடுப்பு கருவிகளை கொண்டிருந்த போதிலும், இந்த தாக்குதலை தடுக்க முடியவில்லை. அதேபோல தாக்குதல் நடக்கும்போது எச்சரிக்கை அலாரம் ஒலிக்காமல் இருந்திருக்கிறது.

இதில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைத் தலைவர் ஹெர்சி ஹலேவி கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் உயிருடன்தான் இருக்கிறார் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருக்கிறது. இப்போது அவர் நூலிழையில் தப்பித்து இருப்பதாகவும், விரைவில் எங்களை அழிக்க நினைப்பவர்களை அழிப்போம் எனவும் ஹிஸ்புல்லா கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் ஏற்படுத்துள்ள பதற்றத்தை மேலும் உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+