மொத்தமாக முடியும் கதை.. பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் வார்னிங்! இதை செய்யலானா தப்பிக்க முடியாது!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பொருளாதாரம் கடுமையான சரிவை சந்தித்திருக்கிறது. இதை உடனடியாக சரி செய்யவில்லை எனில், பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்று ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது. ஊழலை ஒழிப்பது, விரைவான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிக்கும் என ஐஎம்எஃப் கூறியிருக்கிறது.
பாகிஸ்தானில் நிலவும் நிர்வாக பிரச்சனை மற்றும் ஊழல் குறித்து மதிப்பீட்டு அறிக்கையை ஐஎம்எஃப் தயாரித்திருக்கிறது. இந்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் ஊழல்
வறுமை அதிகம் கொண்ட நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. எனவே நாட்டின் வளர்ச்சிக்காக ஐஎம்எஃப் கடனுதவியை வழங்கி வருகிறது. இந்த உதவியை பெற வேண்டும் எனில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். குறிப்பாக நிர்வாக சீர்திருத்தம் மற்றும் ஊழல் ஒழிப்பு சாத்தியப்பட வேண்டும். இந்த அறிவுறுத்தல்களை பாகிஸ்தான் எந்த அளவுக்கு சிறப்பாக கடைபிடித்திருக்கிறது? என்பது குறித்து ஐஎம்எஃப் ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பலவீனமான பாகிஸ்தான்
பட்ஜெட் தயாரிப்பு, நிதி அறிக்கையை சமர்பிப்பது, கொள்முதல், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மேற்பார்வை செய்வது என அனைத்திலும் ஊழல் அதிகரித்திருக்கிறது. மேற்குறிப்பிட்ட அனைத்திலும் பாகிஸ்தான் அரசு தோல்வியை சந்தித்திருக்கிறது. சாதாரண மக்களின் அடிப்படையை தேவையை நிறைவேற்ற கூட அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள். அரசியல் தளத்திலும், பொருளாதாரத்திலும் செல்வாக்கு கொண்ட எலைட் வகுப்பினர், அரசு வகுக்கும் பொது கொள்கையை தங்களுக்கு சாதகமானதாக மாற்றிக்கொள்கின்றனர். பாகிஸ்தானின் பலவீனமான நிதி துறையும் இந்த ஊழலுக்கு துணையாக இருக்கிறது.
ஐஎம்எஃப் கட்டுப்பாடுகள்
இதையெல்லாம் சரி செய்ய வேண்டும் எனில் இன்று தொடங்கி அடுத்த 3-6 மாதங்களுக்குள் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இது நாட்டின் ஜிடிபியை 5-6.5% வரை உயர்த்ததும். இதெல்லாம் செய்தால் பாகிஸ்தானுக்கு அடுத்தக்கட்ட நிதி உதவியை வழங்க முடியும் என்று ஐஎம்எஃப் கூறியிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் அவசியமானவை. ஆனால் இந்த நிறுவனங்களில் உள்ள ஊழல்கள் காரணமாக ஐஎம்எஃப் பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.
வெளிநாட்டு முதலீடுகள்
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பாகிஸ்தான் அரசு, சிறப்பு முதலீட்டு கவுன்சில் எனும் அமைப்பை உருவாக்கியது. இந்த அமைப்பு வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்க உதவும். உதாரணமாக பாக். ஐடி துறையில் வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்கிறது எனில், அந்நிறுவனத்திடம் ஏகப்பட்ட கண்டிஷன்களை விதிக்காமல், தொழில் தொடங்கினால் போதும் என்கிற நிலையில் அழைப்பு விடுப்பது, தொழில் தொடங்க அனைத்து உதவிகளையும் செய்வது போன்றவற்றை கவுன்சில் செய்ய வேண்டும்.
ஆனால் இந்த கவுன்சிலில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று ஐஎம்எஃப் கருதுகிறது. எனவே இந்த பிரச்சனையெல்லாம் சரி செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான், ரூ.10,644 கோடி நிதியை ஐஎம்எஃப் விடுவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications