8 ஆண்டாக பின்லேடன் இருப்பிடம் தெரியாது என மறுத்த பாகிஸ்தான்.. அமெரிக்காவில் மனம் திறந்த இம்ரான் கான்
இஸ்லாமாபாத்: ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்க உளவுத் துறைக்கு சொன்னது யார் என்பது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் தேதி அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க உளவுத் துறை சிறப்பு நடவடிக்கையால் கொன்றது. இந்த நிலையில் அபோதாபாத்தில் பின்லேடன் மறைவிடத்தை அமெரிக்காவிற்கு கூறியது யார்? என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இம்ரான் கான்
எனினும் பாகிஸ்தானோ ஒசாமா பின்லேடன் இருப்பிடம் குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது என கூறிவந்தது. இந்த நிலையில் ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்க உளவுத் துறைக்கு சொன்னது யார் என்பது குறித்து இம்ரான் கான் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

ஒசாமா பின்லேடன்
பிரதமராகியதும் அமெரிக்காவுக்கு முதல் முறையாக இம்ரான் கான் பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து ஃபாக்ஸ் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் பாகிஸ்தானின் உளவு அமைப்புதான் ஒசாமா பின்லேடன் குறித்த தகவலை அமெரிக்காவுக்கு அளித்தது.

அமெரிக்கா
சிஐஏவிடம் கேட்டீர்களென்றால் அவர் இருந்த இடத்தை தொலைபேசி இணைப்பு மூலம் தகவல் அளித்தது ஐ.எஸ்.ஐ. அமைப்புதான் என்பதை கூறுவார்கள். அமெரிக்காவை எங்களுடைய நட்பு நாடாகத்தான் பார்க்கிறோம்.

பேட்டி
ஆனால் அந்த நாடோ எங்களை நம்பவில்லை, எங்கள் பகுதியில் புகுந்து குண்டு போட்டு ஒருவரை கொன்றனர் என்று இம்ரான்கான் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications