துபாயில் நடந்த இம்தாதுல் முஸ்லிமீன் சங்கத்தின் 37வது ஆண்டு விழா
துபாய்: துபாயில் இம்தாதுல் முஸ்லிமீன் சங்கத்தின் 37வது ஆண்டு நிறைவு விழா மற்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாள் விழா ஆகியவை 27.12.2013 அன்று கல்ஃப் மாடல் ஸ்கூலில் நடைபெற்றது.
காலையில் மவ்லூது ஷரீஃப் ஓதப்பட்டது. இறைவசனங்களை மவ்லவி ஜஃபர்தீன் ஜமாலி ஓதினார்.
நிகழ்ச்சிக்கு இம்தாதுல் முஸ்லிமீன் சங்க தலைவர் ஹாஜி ஏ. குலாம் முஹம்மது தலைமை தாங்கினார். மவ்லவி கே. சிராஜுதீன் உமரி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மவ்லவி ஹிதாயத்துல்லாஹ் நூரி, மவ்லவி கே. சிராஜுதீன் உமரி, மவ்லவி முஹம்மது இப்ராஹிம் ஜமாலி ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர்.
செயலாளர் பாவாஜி (எ) சர்புதீன் ஆண்டறிக்கையினையும், கல்விக்குழு அறிக்கையினை கே. சிராஜுதீனும், சிறுசேமிப்பு திட்ட தலைவர் உரையினை ஏ. ஹலீக் ஜமாலும், சிறுசேமிப்பு திட்ட நிதிநிலை அறிக்கையினை ஏ. ஹாஜி முஹம்மதுவும், அல் அமீன் நகர் அறிக்கையினை ஹாஜி எம். காதர் மொய்தீனும், மக்கள் தொடர்பு அறிக்கையினை அபூபக்கர் ஃபாரூக்கும், ஆலோசனை குழு அறிக்கையினை ஏ. ரஹமத்துல்லாவும், நிதிநிலை அறிக்கையினை ஏ. முஹம்மது அலாவுதீனும் வழங்கினர்.
வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஹாஜா மைதீன் நன்றி கூறினார்.